நான் செஞ்ச எல்லாத்துக்கும் காரணம் அந்த 2 பேர்தான்.. என்னை விட சிறப்பா ஒருத்தர் வரப்போறாரு – அஸ்வின் கருத்து

0
32
Ashwin

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் அனில் கும்ப்ளேவுக்கு அடுத்து அதிக விக்கெட் கைப்பற்றியவராக தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின் இருக்கிறார். அவர் சில நாட்களுக்கு முன்பு அளித்திருந்த பேட்டியில் தான் யாருடைய பாரம்பரியத்தை தொடர்வதாகவும், ஐபிஎல் போட்டிகளில் பெறும் சம்பளம் குறித்து மக்கள் நினைப்பது குறித்தும் பேசி இருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் வீரர்களில் விளையாடும் காலத்திலேயே யூட்டூப் மூலமாக மக்களிடையே மிகவும் பரிச்சயமானவராக ரவிச்சந்திரன் அஸ்வின் இருந்து வருகிறார். மற்ற நட்சத்திர வீரர்கள் ஓய்வுக்குப் பிறகு வரலாம் ஆனால் இதில் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்னும் அட்வான்ஸ் ஆக இருக்கிறார்.

- Advertisement -

சுழல் பந்துவீச்சு பாரம்பரியம்

இந்திய கிரிக்கெட் டெஸ்ட் வடிவத்தில் மட்டுமல்லாமல் பொதுவாகவே சுழல் பந்துவீச்சாளர்களை நம்பியே பலகாலம் பயணித்து வந்த ஒரு அணியாக இருந்திருக்கிறது. தற்சமயத்தில் தான் இந்திய அணி வெளிநாடுகளில் டெஸ்ட் தொடரை வெல்லும் அளவுக்கு வேகப்பந்து வீச்சை பலப்படுத்தி இருக்கிறது.

இதில் 90களில் இருந்து எடுத்துக் கொண்டால் அனில் கும்ப்ளே ஹர்பஜன் சிங் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் என மூவரும் மிகவும் முக்கியமானவர்களாக இந்திய சுழல் பந்துவீச்சு துறையின் பாரம்பரியத்தில் பங்கு வகிக்கிறார்கள். தற்போது 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடி இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் 516 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்.

- Advertisement -

இவர்கள் இருவரே காரணம்

இந்த நிலையில் இது குறித்து பேசி இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும்பொழுது “நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. அனில் கும்ப்ளே பாய் மற்றும் ஹர்பஜன் சிங் விட்டு சென்றது என்ன என்பதிலிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். நான் என்ன செய்தாலும் அது அவர்கள் இருவரால்தான். நான் தற்பொழுது செய்து கொண்டிருப்பது அவர்கள் தொடர்ந்து வந்த ஒரு பயணத்தில் ஒரு பகுதியாகும்.

ஐபிஎல் தொடரில் இவ்வளவு அதிகமாக வீரர்கள் சம்பாதிக்கிறார்கள் என மக்கள் பேசிக் கொள்கிறார்கள். அப்பொழுது 2040 ஆம் ஆண்டு ஐ பி எல் தொடரில் வீரர்கள் சம்பாதிப்பதே எங்களோடு வைத்து என்ன சொல்வார்கள். அப்போதும் இப்போதும் சம்பளம் ஒரே போல் இருந்து விடுமா. உலகம் மாறிக் கொண்டே இருக்கும்.

இதையும் படிங்க : பாபர் அசாம் கொடுத்த அந்த வேதனைக்கு அளவே கிடையாது.. மோசமான சில பேரை நீக்கவே முடியல – முகமத் வாசிம் விமர்சனம்

என்னுடைய இந்த பயணத்தை நான் எப்பொழுதாவது விட்டு விடுவேன். இது ஒரு 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயம் போல. ஒரு 100 மீட்டர் ஒருவர் ஓடுவார் இன்னொரு 100 மீட்டர் இன்னொருவர் ஓடுவார். எனவே பரிணாமம் அடைந்து கொண்டே செல்லும். வரக்கூடியவர்கள் சிறப்பானவர்களாக மாறுவார்கள். நிச்சயமாக எனக்கு அடுத்து என்னை விட சிறப்பான ஒருவர் வருவார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -