பாபர் அசாம் கொடுத்த அந்த வேதனைக்கு அளவே கிடையாது.. மோசமான சில பேரை நீக்கவே முடியல – முகமத் வாசிம் விமர்சனம்

0
398
Babar

பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முன்னாள் தேர்வு குழு தலைவர் முகமத் வாசிம் கேப்டன் பாபர் அசாம் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை மிகவும் வேதனையோடு வைத்திருக்கிறார். இப்போது பாகிஸ்தான் கிரிக்கெட்அணி சந்திக்கும் பிரச்சினைகளுக்கு பாபர் அசாமே காரணமாக இருந்திருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.

பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஷ் ராஜா பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த காலகட்டத்தில் முகமத் வாசிம் தேர்வுக்குழு தலைவராக இருந்தார். அப்பொழுது கேப்டனாக இருந்த பாபர் அசாம் மாற்றங்களை ஏற்பதற்கு கொஞ்சமும் தயாராக இல்லாமல் இருந்தார் எனவும், சில வீரர்களுக்கு மோசமான ஆதரவை கொடுத்தார் எனவும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

பாபர் அசாம் பிடிவாதம்

பாபர் அசாம் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களுக்கும் கேப்டனாக இருந்த காலகட்டத்தில் அவர் தனக்கு பிடித்த வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காக சில வீரர்களை அணிக்குள் வரவே அனுமதிப்பதில்லை என்கின்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதன் காரணமாக முகமது அமீர் மற்றும் இமாம் வாசிம் இருவரும் கேப்டன் பாபர் அசாம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வந்தார்கள்.

இந்த நிலையில் பாகிஸ்தான் சொந்த மண்ணிலேயே பங்களாதேஷ் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை பரிதாபமாக தோற்கும் நிலையில் இருக்கிறது. இப்பொழுது ஒட்டுமொத்த பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் மீதும் சுற்றி இருக்கக்கூடியவர்களால் பெரிய விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. இந்த வகையில் முன்னாள் தேர்வு குழு தலைவர் முகமத் வாசிம் கேப்டன் பாபர் அசாம் மீது குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.

- Advertisement -

பாபர் அசாம் வேதனையை தந்தார்

இதுகுறித்து முகமத் வாசிம் கூறும் பொழுது “பாபர் அசாமுக்கு மாற்றங்களின் நன்மையை புரிய வைப்பது மிகவும் வேதனை அளிக்கக் கூடிய ஒன்றாக இருந்தது. அவர் இந்த விஷயத்தில் மிகவும் பிடிவாதமாக இருந்தார். நான் என் பொறுப்புக்கான வரம்புகளை மீறி சில முடிவுகளை எடுத்து அவரை அதற்குள் வர வைத்தேன். ஆனாலும் அவர் மாற்றங்களை ஏற்பதற்கு தயாராகவே இல்லை.

இதையும் படிங்க : நீங்க இத செய்யலனா உங்களுக்குத்தான் அவமானம்.. கோலிகிட்ட நேரா சொன்னேன் – ஹர்பஜன் சிங் வெளியிட்ட தகவல்

பாகிஸ்தான் அணியின் நான்கு பயிற்சியாளர் குழு சேர்ந்து ஒரு குறிப்பிட்ட வீரர்கள் குழுவை அணிக்கு புற்றுநோய் என்று கூறினார்கள். அவர்கள் அணியில் இருந்தால் பாகிஸ்தான் அணி வெல்லாது என்றும் தெரிவித்திருந்தார்கள். நான் அவர்களை நீக்குவதற்கு முயற்சி செய்தேன். ஆனால் அணி நிர்வாகம் அவர்களை மீண்டும் அணிக்கு கொண்டு வந்தது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -