கிரிக்கெட்டுகாகவே பிறந்த பையன் இவரு.. ரோகித் கிட்ட 10 முறை சொன்னேன் – ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டு

0
607
Ashwin

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தனி ஒரு வீரராக இந்திய அணியை ரவிச்சந்திரன் அஸ்வின் வெல்ல வைத்து ஆட்டநாயகன் விருது வென்றார். நிலையில் அந்த போட்டி குறித்து மனம் திறந்து பல விஷயங்களை ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியிருக்கிறார்.

தற்போது 38 வயதாகும் ரவிச்சந்திரன் அஸ்வின் மேற்கொண்டு இன்னும் எத்தனை ஆண்டுகள் விளையாடுவார்? என்பது உறுதியாக சொல்ல முடியாது. இப்படியான நிலையில் தன்னுடைய சொந்த மைதானத்தில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டதோடு, பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு சதம் அடித்து ஆட்டநாயகன் விருது வென்றது அவரது வாழ்நாளில் மிக முக்கியமான போட்டியாக மாற்றி இருக்கிறது.

- Advertisement -

மறக்க முடியாத மறுவருகை

கிரிக்கெட்டைப் பொறுத்த வரையில் முதல் வாய்ப்பு பெறுவதை விட, அணியில் இருந்து வெளியேறி மீட்டும் வந்து சாதிப்பது மிகவும் நெருக்கடியான ஒரு விஷயமாகவும். இந்த விதத்தில் சாலை விபத்தில் சிக்கி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இந்திய அணியில் விளையாட முடியாமல் இருந்த ரிஷப் பண்ட் மறுவருகை மிகச் சிறப்பானதாக இருக்கிறது.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் அருமையாக விளையாடிக் கொண்டிருந்த ரிஷப் பண்ட் எதிர்பாராத விதமாக 39 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஆனால் இதற்கும் சேர்த்து இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி 109 ரன்கள் குவித்து அசத்தினார்.

- Advertisement -

ரிஷப் பண்ட் கிரிக்கெட் விளையாடவே பிறந்தவர்

இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “எனக்கு பிடித்தது மட்டும் கிடையாது ரிஷப் பண்ட் விளையாடிய பொழுது ஒரு நல்ல உணர்வு ஏற்பட்டது. நான் ரோகித் சர்மாவிடம் அவர் சிறப்பாக விளையாடிக் கொண்டிருப்பதாக ஒரு பத்து முறைக்கு பக்கம் சொன்னேன். அவர் விளையாடும் பொழுது எவ்வளவு ரன்கள் வருகிறது அல்லது எப்பொழுது ஆட்டம் இழப்பார் என்று யாராலும் சொல்ல முடியாது”

“ரிஷப் பண்ட் கிரிக்கெட் விளையாடுவதற்காக மட்டுமே மிகச் சரியாக வடிவமைக்கப்பட்டு பிறந்தவர். எல்லா கோணத்திலுமே பலமானவர். அவருக்கு இருக்கும் சக்திக்கு அடித்தால் பந்து எங்கேயோ போகும். அவர் ஒரு கையால் சிக்ஸர் அடிப்பார். அவரைக் குறைத்து மதிப்பிடுகிறார்கள் ஆனால் அவர் மிகவும் திறமைசாலி”

இதையும் படிங்க : ரிஷப் பண்ட் இதனால் ஒரு அதிசய குழந்தை.. அவருக்காக பாகிஸ்தானில் வருந்தினோம் – வாசிம் அக்ரம் பாராட்டு

“ரிஷப் பண்ட் எதுவாக இருந்தாலும் ஓகே சொல்லும் ஆள். பந்து வருகிறதா வரட்டும் என்று கால்களை முன்னே போட்டு வெகு சாதாரணமாக தடுத்து விளையாடி ஆச்சரியப்படுத்துகிறார். அவர் நிறைய திறமைப்படைத்த வீரர்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -