நான் பிளைட் புடிக்க போனப்ப.. பாக் அணி சர்ப்ரைஸ் பண்ணுச்சு.. இந்த பிட்ச்ல எந்த டீமும் சரண் அடையாது – அஸ்வின் பேட்டி

0
212

சமீபத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச ஆணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது.

தான் இது போன்ற நிகழ்வை பார்த்து நீண்ட நாட்கள் ஆகிறது என்று இந்திய அணியின் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் ரவிச்சந்திரன் அஸ்வின் பாகிஸ்தான் அணி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது கிரிக்கெட்டில் மோசமான நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றுதான் கூற வேண்டும். சமீபத்தில் டி20 உலக கோப்பையில் வலுவான அணிகளில் ஒன்றான பாகிஸ்தான் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறாமல் லீக் சுற்றிலேயே வெளியேறியது. இனிமேலாவது தனது தவறுகளை திருத்திக் கொண்டு சிறப்பாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது சொந்த மண்ணிலேயே முதல் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

இந்த நிகழ்வு தற்போது பாகிஸ்தான் அணியை முன்னாள் வீரர்கள் மட்டுமல்லாமல் உலகின் மூத்த கிரிக்கெட் வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து தற்போது இந்திய அணியில் விளையாடிக் கொண்டிருக்கும் டெஸ்ட் ஸ்பெசலிஸ்ட் ரவிச்சந்திரன் அஸ்வின் பாகிஸ்தான் அணி விளையாடிய விதம் தனக்கு ஆச்சரியம் அளித்ததாகவும், அங்கு என்ன நடக்கிறது என்று எனக்கு எதுவும் புரியவில்லை என்றும் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அஸ்வின் கூறும்போது “இந்த போட்டி முதல் மூன்று நாட்களில் ஆர்வம் இல்லாமல் இருந்தது. நான் விமானத்தை பிடிக்க சென்று கொண்டிருந்த போது பாகிஸ்தான் அணி திடீரென்று என்னை ஆச்சரியப்படுத்தியது. நான் இந்த டெஸ்ட் போட்டியை சுருக்கமாக பார்த்தபோது எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரிந்தது. இறுதி நாளில் சரியாக, சோர்வான சரிவாக பாகிஸ்தானுக்கு நிகழ்ந்துள்ளது. நான் நீண்ட நாட்களாக இது போன்ற நிகழ்வை பார்த்ததில்லை.

இது போன்ற ஆடுகளத்தில் அணிகள் சரணடையாது. முதல் தர கிரிக்கெட்டில் வலுவான அணிகள் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்களை நிர்ணயிக்கும்.ஆடுகளம் பேட்டிங் செய்ய உகந்ததாக இருக்கும்.அந்த இரண்டு நாட்களில் சோர்வாகி ஆல் அவுட் ஆகி விடுவார்கள். பிறகு ஆடுகளத்தின் தன்மை மாறும்போது அதன்பிறகும் ஆல் அவுட் ஆவார்கள். இது போன்ற சித்தரிப்புதான் எனக்கு இந்த போட்டியில் கிடைத்துள்ளது. இந்த ஆடுகளத்தில் உயிர் என்று எதுவும் இல்லை. ஆடுகளம் பேட்டிங்செய்ய உகந்ததாக இருந்தது” என்று கூறினார்.

இதையும் படிங்க:141/8.. மும்பை சூரியகுமார் ஸ்ரேயாஸ் சொதப்பல்.. தமிழக அணி பவுலிங் பேட்டிங்கில் அசத்தல்.. புச்சி பாபு 2024

பாகிஸ்தான் அணியின் இரண்டாவது இன்னிங்சில் ரிஸ்வான் மட்டுமே 80 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். ஆனால் அவருக்கு அணியின் பேட்ஸ்மேன்சரியான ஆதரவு கொடுக்கவில்லை. இதுகுறித்து அஸ்வின் “உண்மையில் ரிஸ்வான் மட்டுமே போட்டி குணத்தை வெளிப்படுத்தினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நசீம் சா தேவையில்லாமல் ஒரு ஷாட் விளையாடி வெளியேறுகிறார். உண்மையில் எனக்கு என்ன நடந்தது என்று புரியவில்லை” எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -