டிப்பர் லாரிக்கும் மெர்சிடஸ் பென்சுக்கும் வித்தியாசம் இல்லையா?.. பும்ரா கோகினூர் வைரம் – அஸ்வின் கருத்து

0
1109
Ashwin

இந்திய அணியில் யாரை விடவும் மிக முக்கியமான வீரராக ஜஸ்பிரித் பும்ரா இருக்கிறார் எனவும். அவர் இந்திய அணியின் கோகினூர் வைரம் என்றும் இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மிகவும் பாராட்டி கூறியிருக்கிறார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது தமிழில் ஒரு யூடியூப் ஹிந்தியிலும் ஆரம்பித்திருக்கிறார். அந்த சேனலில் பும்ரா குறித்தான கேள்விக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் மிகவும் வெளிப்படையாகவும் அதே நேரத்தில் விராட் கோலி ரோஹித் சர்மா போன்ற முக்கிய வீரர்கள் இருந்த போதும் பும்ராவையே முக்கிய வீரராக தேர்ந்தெடுத்தார்.

- Advertisement -

கண்டறிய முடியாத காயம்

2021 ஆம் ஆண்டு வாக்கில் பும்ராவுக்கு வித்தியாசமான முறையில் பந்து வீசுகின்ற காரணத்தினால் முதுகில் அழுத்தம் ஏற்பட்டு அதனால் காயம் ஏற்பட்டது. இது மற்ற காயம் போல் இல்லாமல் ஓய்வெடுத்தால் மட்டுமே சரியாக கூடிய ஒன்று என்று கூறப்பட்டது. ஆனால் பும்ரா ஓய்வெடுத்த பொழுதும் அவருக்கு காயம் சரியாகவில்லை.

இதைத்தொடர்ந்து பும்ரா நியூசிலாந்து சென்று இதற்கான அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக திரும்பினார். இதில் நம்ப முடியாத ஒரு விஷயம் என்னவென்றால் அவர் காயத்தில் இருந்து குணமடைந்து வந்த பொழுது தான் வலது கை பந்துவீச்சாளர்களுக்கு வந்து உள்ளே கொண்டு வந்து வெளியே எடுக்கும் வித்தையை சிறப்பாக கற்றுக் கொண்டு வந்தார். அதற்குப் பிறகு பும்ராவை உலக கிரிக்கெட்டில் யாராலும் தடுக்கவே முடியவில்லை.

- Advertisement -

பும்ரா ஒரு கோகினூர் வைரம்

பும்ரா குறித்து பேசி இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “பும்ரா ஒரு வேகப்பந்துவீச்சாளர். மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசக்கூடியவர். அவர் இந்திய கிரிக்கெட்டில் மகுடம் சூடியவர். அவர் ஒரு கோகினூர் வைரம். யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் கபில் தேவ்க்கு பிறகு இவ்வளவு வெற்றிகரமானவர்களாக யாராவது வந்திருக்கிறார்களா? பும்ராவை தவிர வேறு யாராவது இருக்கிறார்களா?”

“பும்ரா எப்படி சிறந்த வீரர் என்றால், மெர்சிடஸ் பென்ஸ் மற்றும் டிப்பர் லாரி இரண்டுக்கும் வித்தியாசங்கள் இருக்கிறது. மெர்சிடஸ் பென்ஸ் ஒரு ஓட்டுனரால் மிகவும் அழகாக இயக்கிக் கொண்டு சென்று விட முடியும். ஆனால் டிப்பர் லாரி வடக்கிலிருந்து தெற்காக மிகப்பெரிய பாரத்தை சுமந்து கொண்டு செல்கிறது”

இதையும் படிங்க: இது யாருக்கும் நடக்கும்.. ஆனா நீ பவுலர் மறந்துடாத.. ரோகித் பையா மாதிரி பார்த்ததே இல்ல – ஆகாஷ் தீப் பேட்டி

“இப்படி செல்லக்கூடிய அந்த டிப்பர் லாரி பழுதடைவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இப்படித்தான் பும்ரா தன் தோள்களில் மிகப்பெரிய சுமைகளை ஏற்றிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறார். இதன் காரணமாக அவர் காயமும் அடைந்தார்.ஆனாலும் அதிலிருந்து திரும்பி வந்து மீண்டும் 145 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசுகிறார். இதற்கான எல்லாப் பெருமையும் அவருக்கு கொடுக்கப்பட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -