இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் வங்கதேச அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கே எல் ராகுல் குறித்த சில கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறார்.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையே முதல் டெஸ்ட் போட்டி தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், இதில் முதல் இன்னிங்ஸ் விளையாடிய இந்திய அணி 376 ரன்கள் குவித்திருந்தது. அதில் மிடில் வரிசையில் களமிறங்கிய கேஎல் ராகுல் 16 ரன்கள் குவித்தார். அதற்குப் பின்னர் தனது முதல் இன்னிங்ஸ் களம் இறங்கிய வங்கதேச அணி 149 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது.
பிறகு இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய இந்திய அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் குவித்து இருந்த நிலையில் டிக்ளர் செய்தது. அதில் கே எல் ராகுல் 19 பந்துகளில் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 8000 ரன்கள் குவித்த 17வது இந்திய கிரிக்கெட் வீரராக மாறினார். ஒட்டுமொத்தமாக 200 சர்வதேச போட்டிகளில் கே எல் ராகுல் விளையாடியுள்ள நிலையில் 17 வது இந்திய கிரிக்கெட் வீரராக இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
தற்போது கேஎல் ராகுலுக்கு அனைவரும் பாராட்டுக்களை தெரிவித்து வரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி கே எல் ராகுல் குறித்து தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். தன்னிடம் திறமை இருப்பதாக கே எல் ராகுல் முதலில் உணர வேண்டும் என்று ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “தன்னிடம் நிறைய திறமை இருக்கிறது என்பதை முதலில் கே எல் ராகுல் உணர வேண்டும். அதனை உணர்ந்து அதே பாணியில் அவர் சிந்தனையோடு விளையாடும் நாளில் அவர் வித்தியாசமான வீரராக இருப்பார்” என்று தனது கருத்தை கூறியிருக்கிறார். மேலும் ஐபிஎல் தொடரில் தற்போது லக்னோ அணிக்காக விளையாடி வரும் ராகுல் அடுத்த ஆண்டு பெங்களூரு அணிக்காக விளையாடுவார் என்று கருத்துக்கள் கூறப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:ஆஸி 6 கேட்ச் மிஸ்.. அடித்து நொறுக்கிய சவுத் ஆப்பிரிக்கா.. செமி பைனல் வாய்ப்பு சிக்கல்!
இந்த சூழ்நிலையில் பெங்களூர் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் கே எல் ராகுலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறது. அதில் “8000 சர்வதேச ரன்கள், எல்லையற்ற திறமை மற்றும் கிளாஸ். நாங்கள் உன்னை நேசிக்கிறோம் கே எல் ராகுல்” என்று தனது பதிவினை வெளியிட்டு இருக்கிறது.