14 வயசு சின்ன பையன்கிட்ட ஒரு அசாதாரணமான விஷயத்தை கண்டோம்.. அப்பவே அவரை உருவாக்க முடிவு செஞ்சோம் – ராஜஸ்தான் கோச்

0
129

நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் ராஜஸ்தான் இளம் வீரர் வைபவ் சூரியவன்சி அபாரமாக விளையாடி தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

அவரது அசாதாரணமான பேட்டிங் குறித்து ராஜஸ்தான் அணியின் கோச் விக்ரம் ரத்தோர் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

14 வயது இளம் வீரர் அசத்தல்

ராஜஸ்தானில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் கில் சிறப்பாக விளையாடி 50 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார். தொடக்க வீரர் சாய் சுதர்சன் 39 ரன்னில் ஆட்டம் இழக்க அவருக்கு பிறகு களம் இறங்கிய ஜாஸ் பட்லர் 26 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி களம் இறங்கியது.

அந்த அணியின் 14 வயது இளம் தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்சி ஆரம்பம் முதலே குஜராத் அணியின் பந்துவீச்சை தாக்குவதையே முக்கிய குறிக்கோளாக வைத்திருந்தார். 17 பந்துகளில் அரை சதம் அடித்த நிலையில் 35 பந்துகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்து இளம் வயதில் சதம் அடித்த முதல் வீரர் என்ற வரலாறை படைத்தார். இதனால் ராஜஸ்தான் அணி 15.5 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது. தற்போதைய இவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கும் நிலையில் ராஜஸ்தான் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் இவர் குறித்து சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

அசாதாரணமான ஒன்றைக் கண்டோம்

இதுகுறித்து விக்ரம் ரத்தோர் கூறும் போது ” இது உண்மையிலேயே மிகவும் சிறப்பான விஷயமாகும் நாங்கள் கடந்த சில மாதங்களாக அவரை வலைகளில் பார்த்து வருகிறோம். அவர் என்ன மாதிரியான திறன் கொண்டவர், என்ன மாதிரியான ஷாட்கள் விளையாட முடியும் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு முன் அழுத்தமான சூழ்நிலைகளில் வலுவான பந்து வீச்சு தாக்குதலுக்கு எதிராக அவர் இதை செய்தது உண்மையிலேயே சிறப்பான விஷயமாகும்.
அவரிடம் உண்மையாகவே சிறந்த திறமை இருக்கிறது. தொழில்நுட்ப ரீதியாகவே அவர் பேட்டை நன்றாக ஸ்விங் செய்யும் திறமை இருக்கிறது.

இதையும் படிங்க:2 மாதம் கூடவே இருந்து அவரை கவனித்தோம்.. உலகத்தரமான பவுலிங்க்கு எதிரா இந்த ஆட்டம் நம்பவே முடியல – ரியான் பராக் ஆச்சரியம்

அவருக்கு அந்த வகையான சக்தியை உருவாக்க அது உதவுகிறது. சிம்பிளாக கூற வேண்டுமென்றால் இதைப் பற்றி இன்னும் பேசிக் கொண்டே இருக்கலாம். 14 வயது குழந்தை இப்படி விளையாடுவது உண்மையிலேயே சிறப்பு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாக முதல்முறையாக அவரைப் பார்த்தபோது ஒரு அசாதாரணமான விஷயத்தை கண்டோம். அப்போதே அவரை வளர்த்து இந்த நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பது எங்களுடைய பொறுப்பு. தனது பதட்டத்தை தக்கவைத்து இன்று ஒரு அசாதாரணமான இன்னிங்ஸ் விளையாடி இருக்கிறார்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -