நேற்று நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் இளம் வீரர் வைபவ் சூரியவன்சி அதிரடியான ஆட்டத்தால் ராஜஸ்தான் அணி எளிதான வெற்றியை பெற்றது.
இந்த சூழ்நிலையில் வெற்றி பெற்ற விதம் குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
ராஜஸ்தான் அபார வெற்றி
ராஜஸ்தானில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் சுப்மான் கில் அதிகபட்சமாக 50 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார். அவருக்குப் பிறகு ஜாஸ் பட்லர் 26 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார்.
அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி களம் இறங்கியது. முதல் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாட, மறுமுனையில் 14 வயது இளம் வீரர் வைபவ் சூரியவன்சி குஜராத் அணியின் பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கினார். 17 பந்துகளில் அரை சதம் அடித்த அவர், 35 பந்துகளில் சதம் அடித்து 14 வயதில் ஐபிஎல் தொடரில் சதம் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்தார். இதனால் குஜராத் அணி 15.5 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது.
இரண்டு மாதங்கள் செலவிட்டோம்
இந்த சூழ்நிலையில் ராஜஸ்தான் அணியில் வெற்றி குறித்து கேப்டன் ரியான் பராக் பேசும் போது “இது நம்பவே முடியாத ஒரு போட்டி ஆகும். நாங்கள் வைபவ் உடன் இரண்டு மாதங்கள் செலவிட்டோம். நாங்கள் என்ன செய்ய முடியும் என்பதை நன்றாக கவனித்தோம். குஜராத் போன்ற உலகத்தரமான பந்துவீச்சுக்கு எதிராக இதனை செய்வது என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு தருணம் ஆகும். கடந்த போட்டியில் இருந்து உண்மையான நோக்கத்துடன் பேட்டிங் செய்து போட்டியை எப்படி முன்பே முடிப்பது என்பதை மாற்றினோம்.
இதையும் படிங்க:வெறும் 35 பந்தில் சதத்தை.. பையன் அடிக்க முக்கிய காரணம்.. இந்த 4 விஷயங்கள்தான் – சச்சின் டெண்டுல்கர் பாராட்டு
நாங்கள் நிறைய பயிற்சி செய்து அதற்கு தகுந்தவாறு இன்றைய போட்டியில் செயல்படுத்தினோம். ஐபிஎல் தொடரை பொருத்தவரை தினமும் ஒரு புதிய விஷயம் கற்றுக் கொள்ளலாம். ஆர்சிபி எப்படி விஷயங்களை செய்கிறது சூர்யா பாய் எப்படி போட்டியை முடிக்கிறார் என்பதையும் பார்க்க வேண்டும். இது போன்ற ஒரு பெரிய வெற்றியை தான் நாங்கள் தேடிக் கொண்டிருந்தோம். இது ஒருதலை பட்சமாக வந்தது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த போட்டியில் நாங்கள் எந்த மாதிரியான ஆடுகளத்தை பெறுகிறோம் என்பதை பொறுத்து முடிவு செய்ய வேண்டும்” என்று பேசி இருக்கிறார்