தற்போது ராகுல் டிராவிட் மகன் சமித் டிராவிட் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் தான் தேர்வு செய்யப்பட்டது குறித்து அவர் பேசியிருக்கிறார்.
ராகுல் டிராவிட் மகன் கர்நாடக கிரிக்கெட்டில் இருக்கிறார் என்பது ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் ஒரு செய்தியாக ஆரம்ப காலகட்டத்தில் இருந்து இருந்து வந்திருக்கிறது. எதிர்பார்த்தபடியே அவரது மகனை சிறந்த கிரிக்கெட் வீரராக உருவாக்கி தற்பொழுது இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கும் கொண்டு வந்திருக்கிறார்.
கூச் பெகார் டிராபி
இந்த வருடம் நடைபெற்ற கூச் பெகார் டிராபியில் கர்நாடக அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதில் ராகுல் டிராவிட் மகன் சமித் டிராவிட் கர்நாடக அணியில் இடம் பெற்று இருந்தார். மேலும் கர்நாடக அணியின் வெற்றியிலும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறந்த பங்களிப்பை கொடுத்திருந்தார்.
இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் சமித் டிராவிட் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருப்பதுடன் மிதவேக பந்துவீச்சு ஆல் ரவுண்டராகவும் இருக்கிறார். இந்திய கிரிக்கெட்டில் இப்படியான வீரர்களுக்கு எப்பொழுதுமே தேவை இருந்து வருகிறது. இதன் காரணமாக இவருக்கு சிறந்த ஒரு எதிர்காலம் இருப்பதாகவும், ராகுல் டிராவிட் அவரை சிறந்த முறையில் பட்டை தீட்டி கொண்டு வருவார் எனவும் கிரிக்கெட் வல்லுனர்கள் கூறி வருகிறார்கள்.
இந்திய அண்டர் 19 அணி வாய்ப்பு
இந்த நிலையில் ஆஸ்திரேலியா அண்டர் 19 அணி இந்தியாவிற்கு இந்த மாதம் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட நான்கு நாட்கள் டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது.
இதற்கான இரண்டு இந்திய அண்டர் 19 அணிகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இந்த இரண்டு அணியிலும் ராகுல் டிராவிட் மகன் சமித் டிராவிட் இடம்பெற்று இருக்கிறார். அடுத்து இந்திய உள்நாட்டு வெள்ளை பந்து தொடர்களிலும் கர்நாடகா அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அப்பொழுதுதான் ஐபிஎல் தொடருக்கு மெகா இடத்தில் கலந்து கொள்ள முடியும்.
இதையும் படிங்க : பங்களாதேஷ் டெஸ்ட்.. தற்போதைக்கு 345 ரன்.. ஜெய்ஸ்வால் ஜோ ரூட் ரெக்கார்டை காலி செய்ய வாய்ப்பு
இந்த நிலையில் இந்திய அணி வாய்ப்பு பற்றி கூறியிருக்கும் சமித் டிராவிட் பேசும் பொழுது “முதலில் இந்திய அணிக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று சொல்லிக் கொள்கிறேன். அதே சமயத்தில் இதற்காக என்னை வாழ்த்திய அனைவருக்கும் நான் நன்றியும் சொல்லிக் கொள்கிறேன். இது குறித்து நான் மிகவும் நன்றாக உணர்கிறேன். இந்த இந்த ஒரு தருணத்திற்காக நான் மிகவும் கடினமாக உழைத்து இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.