ராகுல் டிராவிட் மகன் சமித் டிராவிட்.. 2025 ஐபிஎல் ஏலத்தில் வர முடியாது.. இதுதான் காரணம்

0
1100
Dravid

தற்போது கர்நாடக கிரிக்கெட் சங்கம் நடத்திவரும் மகாராஜா டி20 லீக் டிராபியில் மைசூர் வாரியர்ஸ் அணியில் ராகுல் டிராவிட் மகன் சமித் டிராவிட் விளையாடி வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது இருக்கும் நிலையில் ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்த ஆண்டு கலந்து கொள்ள முடியாது என்று தெரியவருகிறது.

ராகுல் டிராவிட் மகன் சமித் டிராவிட் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கர்நாடக அணியில் கூச் பெஹார் டிராபியில் இடம் பெற்று விளையாடினார். தற்போது இவருக்கு 18 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மேலும் இவர் வலதுகை மிதவே பந்துவீச்சு மற்றும் வலதுகை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என இரண்டு முக்கியமான துறைகளில் விளையாடுகிறார். டி20 கிரிக்கெட் ஆல்ரவுண்டர்களுக்கானது என்பதால் எதிர்காலத்தில் இந்திய டி20 அணியால் இவரால் இடம் பிடிக்க முடியலாம் என்பதோடு, அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இவர் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஏனென்றால் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் மெகா ஏலத்துடன் நடைபெற இருக்கிறது. மேலும் இவர் இந்திய வீரர் என்பதோடு மிக வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் என்கின்ற காரணத்தினால் மற்றும் ராகுல் டிராவிட்டுக்கு இருக்கும் பெயரை பயன்படுத்தி கொள்ளவும் ஐபிஎல் அணி நிர்வாகங்கள் இவரை விரும்பும். எனவே அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்தில் இடம்பெற்று விடுவார் என பலரும் இப்பொழுது வரை எதிர் பார்க்கிறார்கள்.

- Advertisement -

முதலில் ஐபிஎல் ஏலத்தில் ஒரு வீரர் இடம் பெற வேண்டும் என்றால் அவர் குறிப்பிட்ட மாநில கிரிக்கெட் சங்கத்தில் தன்னுடைய பெயரை பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் தன்னுடைய மாநில அணிக்காக இரண்டு வெள்ளை பந்து போட்டிகள் அல்லது ஒரு முதல் தர போட்டியில் விளையாடி இருக்க வேண்டும். பிசிசிஐ நடத்தும் தொடர்களில் விளையாடும் பொழுதுதான் ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பை பெற முடியும்.

தற்போது சமித் படேல் கர்நாடகத்தின் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான அணிக்குதான் விளையாடி இருக்கிறார். கர்நாடக மாநில அணிக்காக இன்னும் விளையாடவில்லை. எனவே தற்போதுள்ள நிலையில் அவரால் ஐபிஎல் மெகா ஏலத்தில் அடுத்த ஆண்டு கலந்து கொள்ள முடியாது.

இதையும் படிங்க : 2012 தாஜ் ஹோட்டல்ல அந்த சம்பவம் நடந்தது.. விராட் கோலி கிட்ட புடிச்சதே அதுதான் – ஸ்ரீகாந்த் பேச்சு

அதே சமயத்தில் அடுத்து வரக்கூடிய பிசிசிஐ நடத்தும் சையத் முஸ்டாக் அலி டி20 தொடரில் சமித் டிராவிட் கர்நாடகா அணியில் இடம் பெறுவதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது என்று கூறப்படுகிறது. அப்படி அவர் இடம் பெற்று இரண்டு போட்டிகள் விளையாடிவிட்டால், அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் நிச்சயம் கலந்து கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போதைய நிலைக்கு முடியாது!

- Advertisement -