7 தோல்வி.. சிஎஸ்கேகிட்ட எதிர் அணிகள் ரொம்ப கவனமா இருக்கணும்.. இனிதான் அவங்க ரொம்ப ஆபத்தானவங்க – பஞ்சாப் கோச் பேட்டி

0
179

ஐபிஎல் கிரிக்கெட் லீக் தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாட உள்ளன.

இந்த சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து பஞ்சாப் பந்துவீச்சு கோச் ஜேம்ஸ் ஹோப்ஸ் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

பஞ்சாப் சென்னை மோதல்

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்த நிலையில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே 2 போட்டிகளில் வெற்றி மற்றும் 7 போட்டிகளில் தோல்வி என புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. மேலும் சென்னை அணி பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறுவது என்பது ஏறக்குறைய உறுதியாககிவிட்டது. எனவே இனி எந்த விதமான அழுத்தமும் இல்லாமல் சென்னை அணி அடுத்த ஐந்து போட்டிகளில் விளையாடும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.

இதில் மற்றொரு ஐபிஎல் அணியான பஞ்சாப் கிங்ஸ் அணியை பொறுத்தவரை ஒன்பது போட்டிகளில் விளையாடி 5 போட்டிகள் வெற்றி மற்றும் மூன்று போட்டிகள் தோல்வி என புள்ளிகள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. எனவே அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் பலம் குறைந்த சென்னை அணியை வீழ்த்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. ஆனால் அது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது என பஞ்சாப் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹோப்ஸ் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இனி இழக்க எதுவும் இல்லை

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது ” ஆமாம் இழக்க இனி எதுவுமே இல்லாத அணிகளோடு விளையாடுவது என்பது ஆபத்தானதாக இருக்கும். நீங்கள் சொன்னது போல சென்னை அணி எங்களின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போடுவதாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு இருக்கிற மிகப்பெரிய விஷயம் என்னவென்றால் எங்கள் முன்னே இருக்கும் போட்டிகளில் கவனம் செலுத்துவது மட்டுமே ஆகும்.

இதையும் படிங்க:முதல் 6 ஓவர்லயே இந்த தப்பை நாங்க செஞ்சா.. நாங்க எப்படி ஜெயிக்க முடியும்.. அவரும் கை கொடுக்கல – அக்சார் பட்டேல்

அடுத்து இரண்டு வாரங்கள் நன்றாக விளையாடினால் இந்தத் தொடர் எங்களுக்கு சிறப்பானதாக இருக்கும் என்று தெரியும். இருப்பினும் இன்று நடைபெற உள்ள போட்டியில் முதல் பந்து முதல் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடுவதில் கவனம் செலுத்த வேண்டும். போட்டியின் ஒவ்வொரு அணியும் இனி ஆபத்தானது தான் அவர்களின் இரவில் நன்றாக செயல்பட்டால் எந்த அணியாலும் எதிரணியை வீழ்த்த முடியும். எனவே வெகு தூரம் முன்னோக்கிப் பார்ப்பது என்பது முட்டாள்தனம். நாளைய போட்டியில் எப்படி வெற்றி பெறுவது என்பதில் மட்டுமே கவனமாக இருக்கிறோம்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -