தற்போது பங்களாதேஷ் அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு இந்திய அணி சென்னையில் முகாம் அமைத்திருக்கிறது. இந்த பயிற்சி முகாமில் பங்களாதேஷ் வேகப்பந்துவீச்சாளரை சமாளிப்பதற்காக பஞ்சாபை சேர்ந்த ஒரு இந்திய வீரர் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி உள்நாட்டில் விளையாடுகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. எனவே மொத்த இந்திய அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் முகாமிட்டு பயிற்சி பெற்று வருகிறது.
உஷார் ஆன இந்திய கிரிக்கெட் நிர்வாகம்
பங்களாதேஷ் அணி பாகிஸ்தான் அணியை அவர்களது சொந்த மண்ணில் வைத்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டு பூஜ்ஜியம் என வென்று வரலாற்று வெற்றியை பெற்றது. இந்த வெற்றியில் பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்தார்கள். குறிப்பாக 6.2 அடி உயரமும், மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடிய நாகித் ராணா முக்கியமானவராக இருந்தார்.
பங்களாதேஷ் அணி இந்த வகையில் சிறப்பாக இருக்க, அதே சமயத்தில் இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி காயத்தால் கிடைக்கவில்லை. இதனால் உஷார் ஆன இந்திய கிரிக்கெட் நிர்வாகம் பும்ராவுக்கு ஓய்வை நீட்டிக்காமல் நேரடியாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு அழைத்து வந்துவிட்டது.
சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு
இந்த நிலையில் உயரமான வேகமான நாகித் ராணா பந்துவீச்சை சமாளிப்பதற்காக, அவரைவிட உயரமான 6.4 அடி உயரம் கொண்ட குன்னூர் பிரார் என்ற பஞ்சாபைச் சேர்ந்த வலதுகை வேகபந்துவீச்சாளரை இந்திய பயிற்சி முகாமுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். இவர் ஐந்து முதல் தர போட்டிகளில் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி ஏழு விக்கெட்டை பற்றி இருக்கிறார். அதே சமயத்தில் 3.80 என்ற குறைவான ரன் மட்டுமே ஓவருக்கு கொடுத்திருக்கிறார்
இதையும் படிங்க : 7 நிமிடம்.. மிஸ்ராவின் குற்றச்சாட்டை பொய் ஆக்கிய சென்னை ரசிகர்.. விராட் கோலி செய்த நெகிழ்ச்சி செயல்
இவரது பந்துவீச்சில் பவுன்ஸ் மாறுபாடுகள் இருக்கின்றது. எனவே நல்ல பவுன்ஸ் கொண்ட சென்னை சிவப்பு மண் ஆடுகளத்திற்கு நாகித் ராணா பந்துவீச்சை எதிர்கொள்வதற்கு இவரது பந்துவீச்சில் விளையாடுவது இந்திய அணிக்கு நல்ல பயிற்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கம்பீர் இந்த வீரரை பயிற்சி முகாமில் கொண்டு வந்து சிறப்பு பயிற்சிக்கு தற்பொழுது ஏற்பாடு செய்திருக்கிறார்!