நாளை பங்களாதேஷ் டி20.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. கம்பீரின் வித்தியாச முடிவுகள்.. அதிரடி மாற்றங்கள்

0
1260
Abhishek

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதிக் கொள்ளும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நாளை மத்திய பிரதேஷ் குவாலியர் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான உத்தேச இந்திய பிளேயிங் லெவனை பார்க்கலாம்.

இந்திய அணி தொடர்ந்து பெரிய டெஸ்ட் தொடர்களில் விளையாட இருக்கின்ற காரணத்தினால், பும்ரா, கில், ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், குல்தீப் யாதவ், அக்சர் படேல் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அதே சமயத்தில் அறிவிக்கப்பட்ட அணியில் ருதுராஜ் சேர்க்கப்படவில்லை.

- Advertisement -

கம்பீரின் புதிய துவக்க ஜோடி

இந்த தொடருக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் இந்திய அணியில் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா இருக்கிறார். அதே சமயத்தில் அவருடன் கம்பீர் சஞ்சு சாம்சனை தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

அதே சமயத்தில் சூரியகுமார் யாதவ் மீண்டும் மூன்றாவது இடத்தில் களம் இறங்கலாம். மொத்தத்தில் கம்பீர் உடைய திட்டமாக ஏழு பந்துவீச்சாளர்கள் மற்றும் 8 பேட்ஸ்மேன் என்கின்ற கலவையில் களமிறங்க திட்டமிட்டு இருக்கிறார். மேலும் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த அணியில் அதிவேக பவுலர் மயங்க் யாதவ் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.

- Advertisement -

உத்தேச இந்திய பிளேயிங் லெவன்

தற்போது இந்த அணியில் சுழல் பங்கு வீச்சாளர்களாக ரவி பிஸ்னாய், வருண் சக்கரவர்த்தி மற்றும் சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இருக்கிறார்கள். உங்களுக்கு எப்படி இருக்கும் இவர்களில் ஒருவருக்கு மட்டுமே முதல் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : வெறும் 30 ஓவர்.. 174 ரன் வித்தியாசம்.. ஸ்டப்ஸ் ருத்ர தாண்டவம்.. தென் ஆப்பிரிக்கா அயர்லாந்து அணி இடம் தொடரை கைப்பற்றியது

அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சங், சூரியகுமார் யாதவ், சிவம் துபே, ரியான் பராக், ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, நிதீஷ் குமார் ரெட்டி, ரவி பிஸ்னாய், அர்ஸ்தீப் சிங் மற்றும் மயங்க் யாதவ்

- Advertisement -