ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கும் மிகச் சிறப்பாக விளையாடி வரும் துவக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கைக்கு தற்போதைய பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மற்றும் இந்திய முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் எப்படி உதவியாக இருந்தார்கள்? என்பது குறித்து தெரிவித்திருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பிரப்சிம்ரன் சிங் நான்கு கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி நிர்வாகத்தால் தக்கவைக்கப்பட்டார். மேலும் தற்போது ஒன்பது போட்டிகளில் விளையாடி 168 ரேட்டில் 294 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் இரண்டு அரை சதங்களும் அடக்கம். இவர் கொடுப்பும் அதிரடியான துவக்கம் அடுத்து வரும் பேட்ஸ்மேன்களுக்கு வசதியாக அமைவது குறிப்பிடத்தக்கது.
பாண்டிங் இரவில் மெசேஜ் செய்தார்
இது குறித்து பேசி இருக்கும் பிரப்சிம்ரன் சிங் கூறும் பொழுது ” பஞ்சாப் அணி நிர்வாகம் இந்த ஆண்டு வீரர்களை தக்க வைப்பது தொடர்பாக பேசிக் கொண்டிருந்த பொழுது, ஒருநாள் இரவில் எனக்கு ரிக்கி பாண்டிங் இடம் இருந்து மெசேஜ் வந்தது. நான் அப்பொழுது வளர்ந்து வரும் ஆசிய வீரர்களுக்கான எமர்ஜிங் ஆசிய கோப்பை தொடரில் விளையாடிக் கொண்டிருந்தேன்”
“அப்போதுதான் நான் முதன்முதலாக தற்போதைய பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் உடன் அரட்டை அடிக்க ஆரம்பித்தேன். அவர் பயிற்சியாளராக வந்ததும் என்னை அணியில் தக்க வைக்க விரும்பினார். மேலும் அவர் என்னிடம் உனக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்று கூறினார். பிறகு நான் அவருடன் என்னுடைய தக்கவைப்பு தொடர்பாக பேச ஆரம்பித்தேன்”
சச்சின் அறிவுரை காப்பாற்றியது
“நான் பஞ்சாப் அணியில் மொத்தம் ஏழு வருடங்களாக இருந்து வருகிறேன். முதல் மூன்று வருடங்களில் எனக்கு விளையாடுவதற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து மேலும் அவர்கள் என்னை தக்க வைப்பார்களா வாங்குவார்களா? என்கின்ற அழுத்தம் எனக்கு ஏற்பட்டது. இந்த மாதிரி கேள்விகள் வரும் பொழுதெல்லாம் நான் ஜிம்முக்கு சென்று ஓடத் துவங்குவேன்”
இதையும் படிங்க : நானும் கீப்பர்தான்.. அடுத்த வருஷம் தோனி ஆடவே கூடாது.. இந்த ஒரு காரணமே போதும் – கில்கிறிஸ்ட் பேச்சு
“இதைத்தொடர்ந்து நான் சச்சின் ஸாரிடம் பேசினேன். அவர் ‘ நான் இப்படி அதிக காலம் வெளியில் அமர்ந்திருந்து பழக்கம் இல்லை. ஆனால் நீ இவ்வளவு தூரம் தாண்டி வந்திருக்கிறாய். எனவே நீ இதிலிருந்து விஷயங்களை தொடர்ந்து கற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் உன்னுடைய இடத்தில் விளையாடுவதற்கு விரும்பக்கூடிய வேறு வீரர்களும் இருக்க செய்வார்கள். அதனால் தொடர்ந்து கற்றுக்கொள்’ என்று கூறினார்”. இது எனக்கு மிகவும் பாசிட்டிவாக அமைந்தது. இது என்னை குழப்பத்தில் இருந்து காப்பாற்றியது” என்று கூறியிருக்கிறார்.