நானும் கீப்பர்தான்.. அடுத்த வருஷம் தோனி ஆடவே கூடாது.. இந்த ஒரு காரணமே போதும் – கில்கிறிஸ்ட் பேச்சு

0
124
Dhoni

ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி விளையாடாமல் ஓய்வை அறிவிக்க வேண்டும் என கூறியிருக்கிறார். இதற்கான காரணத்தையும் தெரிவித்திருக்கிறார்.

தற்போது 43 வயதாகும் தோனி சிஎஸ்கே அணிக்கு தற்காலிக கேப்டனாக பொறுப்பேற்று அணியை வழிநடத்தி வருகிறார். மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கிறது. மேலும் அந்த அணி புள்ளி பட்டியலில் முன்னேறி வருவதற்கான வாய்ப்புகளும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஓய்வு பற்றி தோனி

இந்த நிலையில் இந்த ஐபிஎல் தொடருக்கு முன்பாக தனது ஓய்வு குறித்து பேசி இருந்த தோனி கூறும் பொழுது ” நான் 2019 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டேன். எனவே நான் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதற்கு இன்னும் சில காலம் ஆகலாம். நான் கடந்த சில வருடங்களாக கிரிக்கெட்டை ரசித்து விளையாடி வருகிறேன். எனவே இன்னும் சில ஆண்டுகள் விளையாட விரும்புகிறேன்”

“சிறு வயதில் பள்ளிக்கூடம் படிக்கும் பொழுது கிரிக்கெட் விளையாடி ரசித்ததை போல தற்போதும் செய்ய விரும்புகிறேன். அப்பொழுது மாலை நேரங்களில் எங்களுடைய காலணியில் நான்கு மணிக்கு கிரிக்கெட் விளையாடுவோம். ஒருவேளை மழை வந்திருந்தால் நாங்கள் அப்பொழுது கால்பந்து விளையாடுவோம். இப்பொழுது நான் அதே சிறுவனைப் போல அப்பாவித்தனமான முறையில் கிரிக்கெட் தொடர்ந்து விளையாட விரும்புகிறேன்” என்று கூறியிருந்தார்.

- Advertisement -

ஆடம் கில்கிறிஸ்ட் வலியுறுத்தல்

இந்த நிலையில் ஆடம் கில்கிறிஸ்ட் மகேந்திர சிங் தோனி இந்த ஆண்டுடன் ஓய்வு பெற வேண்டும் என வெளிப்படையாக கூறி இருக்கிறார். மேலும் இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது ஒரு கேட்சை தவறவிட்ட நொடியில் அருகிலிருந்த மேத்யூ ஹடனிடம் தான் ஓய்வு பெற போகிறேன் என்று கூறி, நூறாவது டெஸ்ட்டை விளையாடாமல் ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : நாங்க தவறு செஞ்சோம் செய்வோம்.. ஆனா சூரியவன்சி மாதிரி சிஎஸ்கேவுக்கு கொண்டு வருவோம் – மைக் ஹசி பேட்டி

இதுகுறித்து ஆடம் கில்கிறிஸ்ட் கூறும் பொழுது “தற்போது தோனி கிரிக்கெட்டில் யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய இடத்தில் கிடையாது. மேலும் அவருக்கு எது சரி? எது தவறு? என்ன செய்ய வேண்டும்? என்பது நன்றாக தெரியும். எனவே அவர் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து எதையும் நிரூபித்து காட்ட வேண்டிய அவசியம் இல்லை. அவர் அடுத்த ஆண்டு இங்கு ஒரு வீரராக இருக்கக் கூடாது. அவர் ஓய்வு பெற வேண்டும். தோனி ஐ லவ் யூ, நீங்கள் ஒரு ஐகான்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -