இரானி கோப்பை 2024.. இடம் கிடைக்காத சஞ்சு சாம்சன்.. ரசிகர்கள் மகிழ்ச்சி.. காரணம் என்ன.?

0
453
Sanju samson

இந்தியாவில் நடைபெற உள்ள மிகவும் மதிப்புமிக்க போட்டி தொடரான இராணி கோப்பை 2024க்கான போட்டி நடைபெற உள்ள தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு எதிராக ரஞ்சி சீசனில் சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை அணி மோதவுள்ளது.

இந்த சூழ்நிலையில் துலீப் டிராபியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் ரெஸ்ட் ஆப் இந்திய அணிக்காக சஞ்சு சாம்சன், ரியான் பராக், அர்ஸ்தீப் சிங் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் புறக்கணிக்கப்பட்டதற்கான காரணம் தற்போது வெளிவந்துள்ளது.

- Advertisement -

இந்தியாவின் மிக முக்கிய உள்நாட்டு சீசனான இராணி கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற அக்டோபர் மாதம் முதல் தேதியில் இருந்து நடைபெற உள்ளது. டெஸ்ட் தொடராக நடைபெற உள்ள இந்த போட்டியில் ரெஸ்ட் ஆப் இந்தியா மற்றும் சமீபத்திய ரஞ்சி சீசனில் சாம்பியன் பட்டம் பெற்ற மும்பை அணிகள் மோத உள்ளன. இந்தியாவின் வலுவான இரண்டு உள்நாட்டு அணிகள் மோத உள்ள இந்த போட்டி ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்காக ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருத்ராஜ் கேப்டனாக இந்த அணிக்கு தலைமை தாங்க உள்ளார். மேலும் இந்த அணிக்கு அபிமன்யு ஈஸ்வரன் துணை கேப்டனாக பதவி வகிக்கிறார். இந்த அணியில் தேவ்தத் படிக்கல், சாய் சுதர்சன், இஷான் கிஷன் மற்றும் பிரசித் கிருஷ்ணா போன்ற முக்கிய வீரர்களும் இடம் பெற்று இருக்கின்றனர்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற துலீப் டிராபி தொடரிலும் இந்திய சர்வதேச அணிக்காக சிறப்பாக செயல்பட்ட சில நட்சத்திர வீரர்களின் பெயர்கள் இந்த தொடரில் இடம் பெறாதற்கான காரணம் தற்போது வெளிவந்துள்ளது. அதற்கு முன்பாக துருவ் ஜூரல், யாஷ் தயாள் மற்றும் சர்ஃபராஸ் கான் ஆகிய வீரர்கள் வங்கதேச அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள நிலையில் இந்த வீரர்கள் விளையாட மாட்டார்கள் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.

சஞ்சு சாம்சன், ரியான் பராக், அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகிய முக்கிய வீரர்கள் இந்த போட்டியில் இடம் பெறாததற்கு காரணம் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிராக டெஸ்ட் போட்டித் தொடர் முடிவடைந்த பிறகு அடுத்ததாக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. டி20 தொடரில் முக்கிய வீரர்களாக இவர்கள் கருதப்படுவதால் சூரியகுமார் யாதவ் தலைமையில் ஆன இந்திய டி20 அணியில் இவர்கள் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:0 போட்டிகள்.. இந்திய அணிக்கு ஒரு டெஸ்ட் மேட்ச் கூட இதுவரை ஆடாத 5 தற்போதைய வீரர்கள்

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் வருகிற அக்டோபர் மாதம் ஆறாம் தேதியில் இருந்து நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே இந்திய நட்சத்திர வீரர்கள் இராணி கோப்பை தொடரில் இடம் பெறாமல் போனதற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -