ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற ஒவ்வொரு அணிகளும் இன்னும் எத்தனை ஆட்டங்களில் வெல்ல வேண்டும் ?

0
191
IPL 2021

ஐபிஎல் தொடர் நேற்று கோலாகலமாக தொடங்கியது. கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் நேற்று அந்த அமீரகத்தில் உள்ள துபாய் மைதானத்தில் தொடங்கியது. நேற்றைய முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்று கடந்த ஏப்ரல் மாதம் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் மும்பை அணியிடம் பெற்ற தோல்விக்கு பழிதீர்த்துக் கொண்டது. இந்த ஆட்டத்தோடு 2021 ஆம் ஐபிஎல் தொடரில் 30 ஆட்டங்கள் முடிந்து விட்டன. 30 ஆட்டங்களின் முடிவில் ஒவ்வொரு அணிக்கும் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற இன்னமும் எத்தனை வெற்றிகள் தேவை என்பதை இப்போது பார்ப்போம்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

பொதுவாக ஒரு அணி தகுதி பெற 16 புள்ளிகள் போதுமானதாக இருக்கும். புள்ளிப் பட்டியலில் முதலிட இடத்தை பிடிக்க வேண்டும் என்றால் 18 அல்லது 20 புள்ளிகள் தேவைப்படும். தற்போது சென்னை அணிக்கு முதல் இரண்டு இடத்தை பிடிக்க இன்னமும் இரண்டு அல்லது மூன்று வெற்றிகள் போதுமானதாக இருக்கும். தற்போது சென்னை அணி 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

- Advertisement -

டெல்லி கேப்பிடல்ஸ்

தற்போது புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் டெல்லி அணி இதுவரை எட்டு போட்டிகளில் ஆறு போட்டிகளை வென்றுள்ளது. இன்னும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றாலே டெல்லி அணியால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் பெங்களூரு அணி ஐபிஎல் தொடரின் முதல் பகுதியில் சிறப்பாக ஆடியது. 8 ஆட்டங்களில் 5 ஆட்டங்களை இந்த அணி இதுவரை வென்றுள்ளதால் இன்னும் மீதமிருக்கும் போட்டிகளில் மூன்று ஆட்டங்களில் வென்றால் அடுத்த சுற்றுக்கு பெங்களூரு அணியால் தகுதி பெற முடியும்.

மும்பை இந்தியன்ஸ்

கடந்த ஆண்டு கோப்பை வென்ற மும்பை அணி தற்போது 8 ஆட்டங்களில் ஆடி நான்கு போட்டிகளில் வென்றுள்ளது. அடுத்த சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் மீதமிருக்கும் 6 போட்டிகளில் நான்கு போட்டிகளில் மும்பை அணி வெல்ல வேண்டியது கட்டாயம்.

- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் அணியின் அடுத்து வரும் போட்டிகளில் நான்கு இடங்களில் வெள்ள வேண்டியது கட்டாயம். இதுவரை மூன்று ஆட்டங்களில் மட்டுமே இந்த அணி வெற்றி பெற்றுள்ளது.

பஞ்சாப் கிங்ஸ்

இதுவரை ஆடிய 8 போட்டிகளில் மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள பஞ்சாப் அணி வர இருக்கும் 6 ஆட்டங்களில் 5 போட்டிகளில் என்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 3 ஆட்டங்களில் மட்டுமே வென்றுள்ளது கொல்கத்தா அணி. நீ வரைக்கும் எல்லா ஆட்டங்களிலும் பெற்றால் மட்டுமே இந்த அணியால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

ஆடிய 8 ஆட்டங்களிலும் 1 வெற்றி மட்டுமே பதிவு செய்துள்ளதால் கிட்டத்தட்ட சன்ரைசர்ஸ் அணியின் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை முடிவுக்கு வந்து விட்டதாகவே தெரிகிறது. ஆனாலும் வர இருக்கும் எல்லா ஆட்டங்களிலும் வெற்றி பெற்று மற்ற அணிகள் ஹைதராபாத் அணிக்கு சாதகமாக ஆடினால் இந்த அணியும் அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும்.