“தயவுசெய்து கில்லை விளையாட வைக்காதிங்க.. தோத்தாலும் பரவாயில்லை விட்ருங்க!” – இந்திய முன்னாள் வீரர் அழுத்தமான வேண்டுகோள்!

0
981
Gill

இந்திய அணி உலகக்கோப்பையின் நான்காவது நாளான நாளை வளம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்த்து விளையாட இருக்கிறது.

உலகக் கோப்பையை பொறுத்தவரை எடுத்துக் கொண்டால் ஆஸ்திரேலியா அணியின் கையே இந்திய அணிக்கு எதிராக ஓங்கி இருக்கிறது. ஐந்து முறை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை கைப்பற்றியவர்கள் என்பதால் இந்தப் புள்ளி விபரம் ஆச்சரியம் கிடையாது!

- Advertisement -

மேலும் இந்தியா பாகிஸ்தான் மோதிக் கொள்ளும் போட்டியை விட இந்தியா ஆஸ்திரேலியா மோதிக் கொள்ளும் போட்டி தான் மிகவும் முக்கியத்துவமானது எதிர்பார்ப்பு மிக்கது என்கின்ற பேச்சு இந்திய தரப்பில் இருந்து வந்தது.

இதன் காரணமாக பாகிஸ்தான் தரப்பில் இருந்து இதற்கு எதிர்வினையாக, இந்தியா ஆஸ்திரேலியா மோதும் பொழுது, இந்தியாவின் சாலைகளில் வாகனங்கள் குறைந்திருக்குமா? என்று பதில் கேள்வி வைக்கப்பட்டது.இந்த கருத்து மோதலின் காரணமாக இந்தியா ஆஸ்திரேலியா போட்டிக்கு இன்னும் முக்கியத்துவம் அதிகரித்திருக்கிறது.

இப்படியான நிலைமையில் இந்த ஆண்டு முழுவதும் தன் கிரிக்கெட் வாழ்க்கையின் மிகச் சிறந்த பார்மில் இருக்கும் இளம் வீரர் சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்கின்ற செய்தி கவலையான ஒன்றாக இருக்கிறது. இவர் அடுத்த போட்டியில் விளையாடுவாரா? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பொதுவாக விளையாட முடியாது என்பதுதான் உண்மை!

- Advertisement -

இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பாங்கர் “அவர் பாதி உடல் தகுதியுடன் இருந்தாலும் சென்று விளையாடவே விரும்புவார். அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட விரும்புவார். அவர் இளமையாக இருக்கிறார். அவர் முத்திரை பதிக்க விரும்புகிறார். அவர் எந்த ஒரு போட்டியையும் தவறவிட விரும்பவில்லை.

அவர் தற்போது இருக்கும் கட்டத்தை தாண்டி தான் நாங்கள் எல்லோரும் வந்திருக்கிறோம். அவர் விளையாட முடியும் என்று அணி நிர்வாகம் நினைக்கிறது. ஆனால் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

அவர்கள் கில்லை திரும்ப விளையாட வைப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. இது ஒரு நீண்ட தொடர். சென்னையில் ஈரப்பதமாக இருக்கும். இது உடலை வெகு சீக்கிரம் சலிப்படைய வைக்கும். அவர் ஒரு ஆட்டத்தை தவறவிட்டாலும் பரவாயில்லை. அவரை விளையாட வைக்க வேண்டாம். மீதமுள்ள போட்டிகளுக்கு பாதுகாப்பாக வையுங்கள்!” என்று கேட்டிருக்கிறார்!