556 நாட்கள்.. கோலி பெயிலியர் காரணம் இதுதான்.. அது நடந்திருந்தா வேற ஆள பார்த்திருப்போம் – பார்த்திவ் படேல் கருத்து

0
247
Virat

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி வெறும் ஆறு ரன்கள் மட்டும் எடுத்து வெளியேறி ஏமாற்றம் தந்திருக்கிறார். விராட் கோலியின் பேட்டிங் சரியாக அமையாததற்கு காரணம் என்னவென இந்திய முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் கூறியிருக்கிறார்.

இன்று முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் வேகப்பந்து வீட்டுக்கு சாதகமாக சிவப்பு மண்ணில் உருவாக்கப்பட்டிருக்கிறது. எனவே வேகம் எந்த அளவுக்கு இருந்தாலும் அது விராட் கோலி விளையாடுவதற்கு வசதியாக இருக்கும், எனவே அவர் ரன் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

விராட் கோலி செய்யும் தவறு

விராட் கோலி பொதுவாகவே ஸ்டெம்புக்கு வெளியில் செல்லும் பந்துகளை டெஸ்ட் கிரிக்கெட்டில் தேடிச் சென்று விளையாடி ஆட்டம் இழப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். இந்த போட்டியிலும் அதே வகையில் விளையாடி ஆட்டமிழந்து ரசிகர்களை கோபமடைய வைத்தார். அப்படியான பந்துகளை பவுண்டரி அடிக்க முடியும் என எப்பொழுதும் அவர் நம்புகிறார்.

இந்த நிலையில் நீண்ட நாட்கள் கழித்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு குறிப்பாக இந்தியாவில் விராட் கோலி திரும்புகின்ற காரணத்தினால், இப்படியான தவறுகள் நடப்பது சகஜம்தான் எனவும், இதை தங்களுடைய அணி சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறது எனவும் பங்களாதேஷ் முன்னாள் வீரர் தமிம் இக்பால் கூறியிருந்தார்.

- Advertisement -

வேறு விராட் கோலியை பார்த்திருக்கலாம்

இதுகுறித்து பார்த்திவ் படேல் கூறும்பொழுது ” இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு 556 நாட்கள் கழித்து விராட் கோலி திரும்பி வருகிறார் என தமீம் இக்பால் குறிப்பிட்டார். இப்படி நீண்ட நாட்கள் கழித்து திரும்பி வரும் பொழுது, பேட்டில் பந்து படுவதை உணர விரும்புகிறீர்கள். இதன் காரணமாக இப்படியான வழிகளில் நீங்கள் தவறு செய்து ஆட்டம் இழந்து விடுவீர்கள். இதுதான் விராட் கோலிக்கும் நடந்தது.

இதையும் படிங்க : தோனி முதன் முதலாக.. கேஎல் ராகுலை பார்த்த உடனே அதை சொல்லிட்டார் – தினேஷ் கார்த்திக் பேட்டி

ஒருவேளை இரண்டாவது இன்னிங்ஸில் விராட் கோலி இப்படி வெளியில் செல்லும் பந்தை விக்கெட் கீப்பருக்கு விட்டு விடலாம். உங்களுக்கு கொஞ்சம் போட்டி பயிற்சி குறைவாக இருக்கும் பொழுது இப்படி நடக்கும். அதே வந்து பேட்டின் நடுவில் பட்டிருந்தால், இன்று முதல் நாளிலேயே வேறு மாதிரியான ஒரு விராட் கோலியையும் பார்த்திருக்கலாம். இது எல்லோருக்கும் நடக்கும் ஒன்றுதான்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -