இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மீண்டும் திரும்பி வரமாட்டார் என இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் பார்த்திவ் படேல் கூறி இருக்கிறார்.
ஹர்திக் பாண்டியா கடைசியாக 2018 ஆம் ஆண்டு தனது மாநில அணியான பரோடா அணிக்காக சிவப்பு பந்து கிரிக்கெட்டில் விளையாடு இருந்தார். இதற்குப் பிறகு அவர் சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்கு திரும்பவில்லை. அவரது உடல் அதிக உழைப்பை கூறும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பொருத்தமாக இல்லை என்று கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தெளிவான அறிக்கை
இந்திய கிரிக்கெட் வாரியம் எந்த வீரரும் இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்பி வரவேண்டும் என்றால் அவர்கள் உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் விளையாட வேண்டும் என்று மிகத் தெளிவாக கூறியிருக்கிறது. இது ஹர்திக் பாண்டியாவுக்கு முழுமையாக பொருந்தும்.
ஒருவேளை ஹர்திக் பாண்டியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவார் என்றால், அவர் அதற்கு முன்பாக ரஞ்சி டிராபி தொடரில் பரோடா அணிக்காக விளையாடிய பிறகுதான் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் சேர்க்கப்படுவாரா இல்லையா? என்பது முடிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹர்திக் பாண்டியா திரும்பி வர வாய்ப்பில்லை
இதுகுறித்து பார்த்திவ் படேல் “ஹர்திக் பாண்டியா டெஸ்ட் கிரிக்கெட் திரும்பி வருவதை நான் பார்க்கவில்லை. அவர் வெள்ளைப் பந்து பயிற்சி செய்வதற்கு கிடைக்காத காரணத்தினால் சிவப்பு பந்தில் பயிற்சி செய்திருக்கிறார். நான்கு மற்றும் ஐந்து நாள் போட்டிகளுக்கு அவர் உடல் சரிவர ஒத்துழைக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். அவர் இந்திய டெஸ்ட் அணிக்கு வர வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஒரு உள்நாட்டு போட்டியிலாவது விளையாட வேண்டும். ஆனால் அதற்கு சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது”
இதையும் படிங்க : 9 வருடங்களுக்கு பிறகு நடந்த சோகம்.. 2வது நாள் போட்டி பரிதாப முடிவு.. இந்தியா பங்களாதேஷ் டெஸ்ட்
“இரண்டாவது டெஸ்ட் போட்டியில் யார் தயாலை அறிமுகப்படுத்த இந்திய அணிக்கு ஒரு வாய்ப்பு இருந்தது. ஆனால் பங்களாதேஷ் அணியை குறைத்து மதிப்பிட அவர்கள் தயாராக இல்லை. இந்த நிலையில் பங்களாதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவானால், அதை நியூசிலாந்து தொடரில் நிவர்த்தி செய்தாக வேண்டும். எனவே இந்திய கிரிக்கெட் நிர்வாகம் பரிசோதனை முயற்சிகளை செய்ய தயாராக இருக்காது” என்று கூறி இருக்கிறார்.