வெளிப்படையா சொல்றன்.. இந்திய அணியிடம் நாம் இதை கத்துக்கணும் – பாகிஸ்தான் இப்திகார் அஹமத் பேச்சு

0
1277
Iftikhar

பாகிஸ்தான் வீரர் இப்திகார் அஹமத் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடமிருந்து ஒரு குறிப்பிட்ட விஷயத்தை பாகிஸ்தான் அணி கற்றுக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டிருக்கிறார்.

பாகிஸ்தான அணி 2021 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர் நேரத்தில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு வலிமையாக திரும்புவது போல தெரிந்தது. அப்பொழுது அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் தொடர்ந்து சீராக ரன்களை குவித்துக் கொண்டே இருந்தார்கள்.

- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட்டின் சரிவு

உலக கிரிக்கெட்டில் பெரிய நாடுகள் பாதுகாப்பை காரணம் காட்டி பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவதை பல காலமாக தவிர்த்து வந்தன. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு பெரிய அளவில் வருமானம் கிடைப்பது தடைபட்டது. இதனால் உள்நாட்டு கிரிக்கெட்டில் பெரிய அளவில் முதலீடு செய்ய முடியாததால் பாகிஸ்தான் கிரிக்கெட் சரிவை கண்டிருக்கிறது.

இதன் காரணமாக பாகிஸ்தான் தேசிய அணிக்கு தேவையான இளம் திறமைகள் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து கிடைப்பது நின்றுவிட்டது. இதனால் மாறிவரும் கிரிக்கெட்டுக்கு சர்வதேச அளவில் சவால் அளிக்கக்கூடிய வீரர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இல்லை. எனவே எப்பொழுதும் இல்லாத அளவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அறிந்திருக்கிறது. மேலும் பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட்டில் இருக்கும் வீரர்களுக்கு உடல் தகுதி மற்றும் ஒற்றுமை இல்லாததும் பிரச்சனையாக இருக்கிறது.

- Advertisement -

ஆதிக்கம் செலுத்தும் மூன்று நாடுகள்

தற்போது உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து என மூன்று நாடுகள் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்தும் நாடுகளாக இருக்கின்றன. இந்த மூன்று நாடுகளும் பெரிய அளவில் வருமானத்தை குவிப்பதோடு, சிறந்த கிரிக்கெட் திறமைகளை உருவாக்கி தேசிய அணிக்குள் கொண்டு வந்து சிறந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார்கள்.

இதையும் படிங்க : இனி பும்ராவை பற்றி அதை தைரியமா சொல்லலாம்.. எங்களலாம் ஈசியா தாண்டுவாரு – ஜாகீர் கான் கருத்து

இதுகுறித்து பாகிஸ்தான் வீரர் இப்திகார் அஹமத் கூறும் பொழுது ” இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து என மூன்று அணிகளும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் தாக்குதல் அணுகு முறையை கொண்டிருப்பதாக நான் நினைக்கிறேன். இதன் காரணமாகவே அவர்கள் உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். எனவே பாகிஸ்தான் அணியும் இவர்களிடமிருந்து இந்த விஷயத்தை எடுத்துக் கொண்டு செயல்பட்டால் உலக கிரிக்கெட்டில் சவால் அளிக்க முடியும். இதனால் நாமும் அப்படியே செயல்பட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -