பணக்கார பையன் இல்ல.. கையில் எப்பவும் காசு கூட இருக்காது.. பாபர் அசாம் உலக கோப்பைக்கு முன் உருக்கம்

0
569

டி20 உலக கோப்பையில் பங்கேற்க அனைத்து அணிகளும் மிகத் தீவிரமான பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வருகிற ஒன்றாம் தேதி தனது முதல் பயிற்சி ஆட்டத்தை எதிர்கொள்ள உள்ளது.

தற்போது அமெரிக்கா சென்று உள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வருகிற ஜூன் 6-ம் தேதி அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடுகிறது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆஸம் அவரது வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில் அவர் எதிர்கொண்ட கடினமான சூழ்நிலை மற்றும் அவரது பெற்றோர் அளித்த ஆதரவு குறித்து கூறியிருக்கிறார்.

- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சில மாறுதல்களை எதிர்பார்த்து ஏற்கனவே கேப்டனாக இருந்த ஷாகின் சா அப்ரிடியை கேப்டன் பதவியில் இருந்து விலக்கி பாபர் ஆஸமை கேப்டனாக நியமித்தது. மேலும் 2011ம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வென்ற போது பயிற்சியாளராக இருந்த கேரி கிர்ஸ்டன் அவர்களை பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக நியமித்தது.

இந்த முறை எப்படியாவது உலக கோப்பையை வென்று விட வேண்டும் என்று உறுதியில் பாகிஸ்தான் அணியினர் மிகத் தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வருகிற ஆறாம் தேதி தனது முதல் போட்டியில் அமெரிக்க அணியும், அதன் பிறகு ஜூன் ஒன்பதாம் தேதி நியூயார்க் நகரின் கவுண்டி மைதானத்தில் இந்திய அணியையும் எதிர்கொள்ள உள்ளது.

- Advertisement -

இது டி20 உலக கோப்பையிலே இந்த போட்டி மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டி வில்லியர்ஸ் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாபர் ஆஸம், கிரிக்கெட்டில் தனது ஆரம்ப காலகட்டம் கடினமாக இருந்ததாகவும் தனது பெற்றோரே முழு ஆதரவை அளித்ததாகவும் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து பாபர் ஆஸம் விரிவாக கூறும் பொழுது
“நான் பெரிய பணக்கார குடும்பத்தில் இருந்து எல்லாம் வரவில்லை. எங்களிடம் எப்போதும் பணம் இருந்ததில்லை. ஆனால் எனது குடும்பத்தினர் எனக்கு போதிய ஆதரவை அளித்தனர். நான் தெருக்களில் நிறைய கிரிக்கெட் விளையாடிதான் வளர்ந்தேன். தெருக்களில் கடினமான பந்தில் கிரிக்கெட் விளையாடுவது எப்போதுமே சவாலான ஒன்றாக இருக்கும்” என்று பாபர் ஆசம் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:8 வருட கெயில் மெகா சாதனை.. நூலிழையில் தவறவிட்ட அமெரிக்க வீரர்.. அஸ்வின் பாராட்டு

கடைசியாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாடிய இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை இழந்த பிறகு தனது முதல் பயிற்சி போட்டியை டல்லாஸில் உள்ள கிராண்ட் பிரேரி ஸ்டேடியத்தில் விளையாட உள்ளது. பெரிய சர்வதேச தொடர்களில் இரண்டு முறை இந்திய அணியை வீழ்த்திய ஒரே பாகிஸ்தான் கேப்டன் என்ற பெருமையை பாபர் ஆஸம் பெற்று இருக்கிறார். 2021 டி20 உலக கோப்பையிலும் 2022 ல் விளையாடிய ஆசிய கோப்பையிலும் இந்திய அணி தோல்வி அடைந்திருந்து குறிப்பிடத்தக்கது.

- Advertisement -