எங்க பாகிஸ்தான் பவுலர்ஸ்.. மோர்கலை ஒன்னுமே இல்லனு நினைச்சாங்க.. இந்தியா செம – பசித் அலி விமர்சனம்

0
2082
Morkel

பாகிஸ்தான் அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சி பயிற்சியாளர் மோர்னே மோர்கலை பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் மதிக்கவில்லை என பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி விமர்சனம் செய்திருக்கிறார்.

2023ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் முடிவடைந்ததும் பாகிஸ்தான் பந்துவீச்சு பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் மோர்னே மோர்கல் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

விடாமல் துரத்திய கம்பீர்

இந்திய அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளர் கம்பீர் தான் விளையாடியதில் மோர்கல் பந்துவீச்சில் மிகவும் கடினப்பட்டதாக கூறியிருப்பார். மேலும் அவருடன் இணைந்து டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்காக ஐபிஎல் தொடரிலும் விளையாடியிருக்கிறார். பயிற்சியாளராக ஐபிஎல் தொடரில் லக்னோ அணியிலும் பணியாற்றி இருக்கிறார்.

இதன் காரணமாகவே இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பொறுப்புக்கு மோர்னே மோர்கலை தடைகளை மீறி அழைத்து வந்திருக்கிறார். பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக அவர் இருந்த பொழுது நிறைய சிரமங்களை சந்தித்தார். அவரது அறிவுரையை சரியாக பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் எடுத்துக் கொள்ளவில்லை. இந்த நிலையில் இந்திய பந்து வீச்சு பயிற்சியாளராக அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்.

- Advertisement -

பாகிஸ்தான் பவுலர்கள் மதிக்கவில்லை

இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பசித் அலி கூறும் பொழுது “பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் கிரிக்கெட்டை விட தங்களை பெரிய ஆள் என்று நினைத்தார்கள். மேலும் மோர்னே மோர்கலை தங்களுக்கு முன்னால் ஒன்றுமே இல்லை எனவும் நினைத்தார்கள்”

இதையும் படிங்க : சதம் அடித்த பண்ட் சுப்மன் கில்.. சச்சின் டெண்டுல்கர் சிறப்பு பாராட்டு.. இதைவிட வேறு என்ன வேணும்

“நாங்கள் இப்போது எல்லா வித்தியாசத்தையும் அறிந்து கொண்டிருக்கிறோம். இந்திய அணிக்கு எதிராக விளையாடும் இதே பங்களாதேஷ் அணிதான் பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும் விளையாடியது. அப்போது பாகிஸ்தான் அணி பேக் புட்டில் இருந்தது போல இருந்தது. பாகிஸ்தான் அணியை ஒயிட் வாஷ் செய்தது இதே பங்களாதேஷ் அணிதான். வித்தியாசம் என்னவென்றால் மைண்ட் செட், சிந்தனை மற்றும் தரம் ஆகியவைதான்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

- Advertisement -