நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறிவிட்டது. இன்று அந்த அணி தனது கடைசிப் போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிராக ஃப்ளோரிடா மைதானத்தில் விளையாடியது. இந்தப் போட்டியில் தட்டுத் தடுமாறி ஆனால் அயர்லாந்து அணியை பாகிஸ்தான் அணி வென்றது.
இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. நசீம் ஷா இடத்தில் அப்பாஸ் அப்ரிடி இடம் பெற்றார். பாகிஸ்தான் பந்துவீச்சில் இன்று வழக்கம் போல் அனல் பறந்தது. அயர்லாந்து அணி 32 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்துவிட்டது.
இதற்கு அடுத்து அயர்லாந்து அணிக்கு டெலனி அதிரடியாக விளையாடி 19 பந்தில் 31 ரன்கள் எடுத்தார். மார்க் அடைர் 19 பந்தில் 15 ரன்கள், ஜோஸ்வா லிட்டில் 18 பந்தில் 22 ரன்கள் கடைசி நேரத்தில் எடுக்க, அயர்லாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 106 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷாகின் அப்ரிடி மற்றும் இமாத் வாசிம் இருவரும் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதற்கு அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் முகமது ரிஸ்வான் 16 பந்தில் 17 ரன்கள், சையும் அயூப் 17 பந்தில் 17 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதற்கு அடுத்து பாகிஸ்தான அணி வழக்கம் போல் திடீரென சரிந்து 62 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. அயர்லாந்து அணி போட்டிக்குள் நுழைந்தது.
இதற்கு அடுத்து உள்ளே வந்த அப்பாஸ் அப்ரிடி பாபர் அசாம் உடன் இணைந்து 40 பந்தில் 33 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். அவர் 21 பந்தில் 17 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதற்கு அடுத்து கடைசி இரண்டு ஓவரில் சரியாக 12 பந்துக்கு 12 ரன்கள் பாகிஸ்தான் வெற்றிக்கு தேவைப்பட்டது.
இதையும் படிங்க : பாபர் அசாம் டி20 கிரிக்கெட் விளையாடவே கூடாது.. இந்த டக் டுக் பேட்டிங் சரிவரவே வராது – ஸ்ரீகாந்த் விமர்சனம்
இந்த நிலையில் பேட்டிங் செய்ய வந்த ஷாஹீன் அப்ரிடி 19 ஆவது ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் அடித்து பாகிஸ்தான் அணியை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறவைத்தார். இறுதிவரை களத்தில் நின்ற கேப்டன் பாபர் அசாம் 34 பந்தில் 32 ரன்கள் எடுத்தார். கடைசியில் அப்பாஸ் அப்ரிடி மற்றும் ஷாகின் அப்ரிடி பேட்டிங்கால் பாகிஸ்தான் அணி ஒரு வழியாக வெற்றி பெற்றது.