பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து முதல் சுற்று உடன் வெளியேறியிருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பாபர் அசாம் மீது கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.
பாபர் அசாம் டி20 கிரிக்கெட்டில் 4000 ரன்களை கடந்து விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரை தாண்டி இருக்கிறார். மேலும் 3 சதம் மற்றும் 36 அரை சதங்கள் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அடித்திருக்கிறார். ஆனால் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 129 என இருக்கிறது.
மேலும் பாபர் அசாம் இதுவரை டி20 உலகக் கோப்பை தொடர்களில் பவர் பிளேவில் ஒரு சிக்சர் கூட அடித்தது கிடையாது. அவரால் துவக்க வீரராக வந்து அணிக்கு தாக்கத்தை ஏற்படுத்த முடிவதில்லை. இது குறித்து பாகிஸ்தானில் இருந்தும் முன்னாள் வீரர்கள் விமர்சனங்கள் செய்து வருகிறார்கள்.
ஷாகின் அப்ரிடி பாகிஸ்தான் அணியின் கேப்டனாக கொண்டுவரப்பட்ட பொழுது பாபர் அசாமை மூன்றாவது இடத்தில் விளையாட வைத்தார்கள். அவரை மீண்டும் கேப்டனாக கொண்டு வந்ததும் அவர் மீண்டும் துவக்க வீரராக வர ஆரம்பித்திருக்கிறார்.
இது குறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறும் பொழுது “பாபர் அசாம் டி20 கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அதாவது டி20 கிரிக்கெட்டில் இந்த டக் டுக் பேட்டிங் எல்லா நேரத்திலும் சரிவராது. விராட் மற்றும் ரோஹித் போல பாபர் அசாம் 4000 ரன்கள் எடுத்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் அவருடைய ஸ்டிரைக் ரேட் 112 முதல் 115 தான் இருக்கிறது. இப்பொழுது இதற்கு நீங்கள் என்ன சொல்வீர்கள்? என்று கேட்டிருக்கிறார்.
இதையும் படிங்க : ஐசிசி சொன்னா கேளுங்க.. இந்தியா கூட பாகிஸ்தான் டீம போடாதிங்க.. சேவாக் சொன்ன காரணம்
மேலும் சில பாகிஸ்தான் முன்னால் வீரர்களே பாபர் அசாமை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள். ஆனால் தற்பொழுதுதான் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கி மீண்டும் கொண்டு வந்திருக்கிறார்கள். எனவே மீண்டும் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் புயல் அடிக்க ஆரம்பித்திருக்கிறது.