பாகிஸ்தான அணி உள்நாட்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான பிளேயிங் லெவனை தற்பொழுது பாகிஸ்தான் அணி வெளியிட்டிருக்கிறது.
நாளை மறுநாள் பாகிஸ்தானை உள்நாட்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக ராவல் பிண்டி மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. 16 மாதங்களுக்குப் பிறகு உள்நாட்டில் பாகிஸ்தான் அணி விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும்.
மேலும் தற்போது பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்று இருக்கும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பிக்கும் இதுவே பாகிஸ்தான் பயிற்சியாளராக முதல் போட்டியாக அமைகிறது.
மேலும் அறிவிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் பிளேயிங் லெவனில் துவக்க ஆட்டக்காரராக இளம் அதிரடி வீரர் சையும் அயூப் இடம் பெற்று இருக்கிறார். மேலும் விக்கெட் கீப்பராக அனுபவ வீர சர்பராஸ் அகமதுக்கு பதிலாக முகமது ரிஸ்வான் மீண்டும் கொண்டுவரப்பட்டிருக்கிறார்.
இத்துடன் இந்த பிளேயிங் லெவனில் 28 வருடங்களுக்குப் பிறகாக பாகிஸ்தான் அணி ஒரு பிரதான சுழல் பந்துவீச்சாளர் இல்லாமல் விளையாட இருக்கிறது. ஏற்கனவே 15 பேர் கொண்ட அணியில் இருந்த பிரதான சுழல் பந்துவீச்சாளர் அப்ரார் அகமது ஷாகின் அப்ரிடி உள்ளே வந்த காரணத்தினால் நீக்கப்பட்டு விட்டார். இந்த அணியில் பகுதி நேர சுழல் பந்துவீச்சாளராக ஆஹா சல்மான் மட்டுமே இருக்கிறார்.
ஆஸ்திரேலிய மனநிலையை பாகிஸ்தான் அணியில் புகுத்துகிறார் என, கில்லெஸ்பி எடுத்து இருக்கும் இந்த முடிவு பாகிஸ்தான் முன்னாள் வீரர்களால் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஆசிய நாட்டில் ஒரு ஆசிய அணி ஒரு பிரதான சுழல் பந்துவீச்சாளர் இல்லாமல் விளையாடுவது மிகவும் ஆச்சரியமான ஒன்று!
இதையும் படிங்க : 258 ஸ்ட்ரைக் ரேட்..124 ரன்கள்.. தனியாளாக ருத்ர தாண்டவம் ஆடிய கருண் நாயர்.. மகாராஜா டி20 லீக் 2024
பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் பிளேயிங் லெவன் :
அப்துல்லா ஷபீக், சைம் அயூப், ஷான் மசூத் (கே), பாபர் ஆசம், சவுத் ஷகீல் (து.கே), முகமது ரிஸ்வான் (வி.கீ), சல்மான் அலி ஆகா, ஷஹீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, குர்ரம் ஷாஜாத் மற்றும் முகமது அலி.