கர்நாடக கிரிக்கெட் அசோசியேஷன் நடக்கும் நடப்பு மகாராஜா டி20 லீக்கில் இன்று மைசூர் வாரியர்ஸ் மற்றும் மங்களூர் டிராகன்ஸ் மோதிக்கொண்ட போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி இருக்கும் கருண் நாயர் அதிரடியான சதம் விளாசி அசத்தியிருக்கிறார்.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மங்களூர் டிராகன்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மைசூர் வாரியர்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் அஜித் கார்த்திக் 8 பந்தில் 11 ரன்கள், எஸ்யு.கார்த்திக் 26 பந்தில் 23 ரன்கள், சமித் டிராவிட் 12 பந்தில் 16 ரன்கள், சுமித் குமார் 12 பந்தில் 15 ரன்கள், மனோஜ் பாண்டேஜ் 14 பந்தில் 31* ரன்கள் எடுத்தார்கள்.
ஒருமுனையில் நிலைத்து நின்று விளையாடிய மைசூர் வாரியர்ஸ் அணியின் கேப்டன் கருண் நாயர் 48 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் உடன் 258.33 ஸ்ட்ரைக்ரேட்டில் ஆட்டம் இழக்காமல் 124 ரன்கள் அடித்து நொறுக்கி தள்ளினார். 20 ஓவர்கள் முடிவில் மைசூர் வாரியர்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் குவித்தது. மங்களூர் டிராகன்ஸ் தரப்பில் பந்துவீச்சில் அபிலாஷ் செட்டி மட்டும் சிறப்பாகப் பந்துவீசி 4 ஓவரில் 27 ரன்கள் தந்து 2 விக்கெட் கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி மங்களூர் டிராகன்ஸ் அணி விளையாடிய பொழுது மழை வந்து குறுக்கிட்டது. இதன் காரணமாக அந்த அணிக்கு இலக்கு 14 ஓவரில் 166 ரன்கள் என்று மாற்றப்பட்டது. மேலும் அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற உடனடியாக ரன் அழுத்தம் ஏற்பட்டு நெருக்கடி உருவானது.
இந்த நிலையில் நிகின் ஜோஸ் 21பந்தில் 32 ரன்கள், கிருஷ்ணமூர்த்தி சித்தார்த் 27 பந்தில் 50 ரன்கள் அதிரடியாக எடுக்க ஆட்டத்தில் கொஞ்சம் விறுவிறுப்பு ஏற்பட்டது. அடுத்தடுத்துஇவர்கள் ஆட்டம் இழந்து வெளியேற வெற்றிக்கு கடைசி ஓவரில் 33 ரன்கள் தேவைப்பட்டது.
இதையும் படிங்க : பிராட்மேன் சச்சினையே அப்படி கூப்பிடாதப்போ.. ஏன் கோலியை அப்படி கூப்பிடனும்.. என்னால முடியாது – பாசித் அலி பேட்டி
இந்த நிலையில் மங்களூர் டிராகன்ஸ் அணியால் கடைசி ஓவரில் ஆறு ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த அணி பதினாறு ஓவர்களுக்கு 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது. இறுதியாக மைசூர் வாரியர்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பந்துவீச்சில் மைசூர் வாரியர்ஸ் தரப்பில் அஜித் கார்த்திக் மற்றும் ஜெகதீசா சுசித் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.