இலங்கை அணி தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் நாளை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கும் இரண்டாவது போட்டிக்கான பிளேயிங் லெவனை அறிவித்திருக்கிறது.
இந்த தொடரின் முதல் போட்டி மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் எதிர்பார்த்ததை விட இலங்கை அணி நன்றாக விளையாடி இருந்தாலும் கூட, ஜோ ரூட் பாஸ்பால் அணுக முறையில் இருந்து வெளியில் வந்து பொறுப்பாக விளையாட இங்கிலாந்து அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது.
தினேஷ் சண்டிமல் சவால்
இலங்கை அணி எதிர்பார்த்ததை விட சிறப்பாக விளையாடிய காரணத்தினால் அந்த அணியின் தன்னம்பிக்கை தற்போது அதிகரித்து இருக்கிறது. எனவே இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் தங்களால் வீழ்த்த முடியும் என்று இலங்கை அணி நம்புகிறது. மேலும் இந்தத் தொடரில் தொடக்க ஆட்டக்கார ஜாக் கிரவுலி மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இல்லை. இத்தோடு முதல் போட்டியில் காயமடைந்து மார்க் வுட் தொடரை விட்டு வெளியேறி விட்டார்.
இந்த நிலையில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நிச்சயம் தங்கள் அணி இங்கிலாந்து அணியை தோற்கடிக்கும் என இலங்கை விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் தினேஷ் சண்டிமல் முதல் டெஸ்ட் முடிவுக்கு பிறகு பேசி இருந்தார். தற்போது இலங்கை அணி நிலவுக்கு மேல் இருப்பதாகவும் கூறியிருந்தார்.
2வது போட்டிக்கான பிளேயிங் லெவன்
இந்த நிலையில் நாளை துவங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை பிளேயிங் லெவன் இரண்டு மாற்றங்களுடன் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்த குசால் மெண்டிஸ் நீக்கப்பட்டு அவருடைய இடத்தில் பதும் நிஷாங்கா சேர்க்கப்பட்டிருக்கிறார். மேலும் வேகப் பந்துவீச்சாளர் விஷ்வா பெர்னாடோ நீக்கப்பட்டு லகிரு குமாரா சேர்க்கப்பட்டிருக்கிறார்.
இலங்கை அணி பிளேயிங் லெவன்:
திமுத் கருணாரத்ன, நிஷான் மதுஷ்க, பதும் நிஷாங்க, ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா (கே), கமிந்து மெண்டிஸ், பிரபாத் ஜெயசூரிய, அசித பெர்னாண்டோ, லகிரு குமார மற்றும் மிலன் ரத்நாயக்க.