தற்போது ஐக்கிய அரபு எமிரேட்டில் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ள இருக்கின்றன. இந்த நிலையில் பாகிஸ்தான் கேப்டன் இந்திய அணிக்கு எச்சரிக்கை செய்திருக்கிறார்.
இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தோல்வி அடைந்தது. எனவே இன்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் இருக்கிறது. ஒருவேளை தோல்வி அடைந்தால் அரை இறுதி வாய்ப்பை இந்திய அணி இழந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகள்
இந்திய அணி இடம் பெற்றுள்ள பிரிவில் ஆஸ்திரேலியா நியூசிலாந்து பாகிஸ்தான், இலங்கை ஆகிய நான்கு அணிகள் இருக்கின்றன. இந்திய அணி தற்போது பட்டியலில் உள்ள எல்லா அணிகளையும் வீழ்த்த வேண்டும் நல்ல ரன் ரேட்டில் வீழ்த்த வேண்டும் என்கின்ற நிலையில் இருக்கிறது. எனவே இன்றைய போட்டி இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது.
இந்த போட்டி குறித்து பாகிஸ்தான் கேப்டன் ஃபாத்திமா சனா பேசும் பொழுது “அழுத்தம் பெரிய அளவில் கிடையாது. கொஞ்சம் கூட்டமாக இருக்கின்ற காரணத்தினால் எங்களுடைய வீராங்கனைகள் கொஞ்சம் அழுத்தத்தில் இருக்கலாம். நாங்கள் அதிக அழுத்தம் ஏற்படுத்திக் கொள்ளாமல் அமைதியாக இருப்பதற்கு முயற்சி செய்வோம். எங்களால் முடிந்தவரை நிலைமையை கையாள்வோம்” என்று கூறி இருக்கிறார்.
பவர் ஹிட்டிங் ஸ்பெஷலிஸ்ட்
மேலும் பேசிய அவர் கூறும் பொழுது “எந்த அணிக்கு எதிராக விளையாடினாலும் தாக்குதல் கிரிக்கெட்டை விளையாடுவதை நான் பார்த்து வருகிறேன். எனவே என்னுடைய அணியிலும் அப்படியான வீராங்கனைகள் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். எங்களுக்கு எதிராக யார் வந்தாலும் முதல் பந்திலேயே நாங்கள் அடித்துதான் விளையாடுவோம். இந்த விஷயத்தில் நாங்கள் நிறைய உழைத்திருக்கிறோம். இதற்கான ரிசல்ட்டை நீங்கள் பார்ப்பீர்கள்”
இதையும் படிங்க : நான் 156 கிமீ மயங்க் யாதவ் பவுலிங்ல வலையில் ஆடல.. காரணம் இதுதான் – சூரியகுமார் யாதவ் பேட்டி
“தென் ஆப்பிரிக்கா இன்னைக்கு எதிரான போட்டியை பார்த்தால் எங்கள் வீராங்கனைகள் பவர் ஹிட்டிங்கில் மேம்பட்டு இருக்கிறார்கள். வெளியே ஃபீல்டர் இருந்தாலும் கூட தாண்டி சிக்ஸர் அடிக்க முடியும் என்று நம்புகிறார்கள். எல்லா பெண்களும் எங்கள் அணியில் இதில் நம்பிக்கை உடன் இருப்பது சிறப்பானது. என்னாலும் முடியும் என்று நம்புகிறேன். இந்த நம்பிக்கை இந்த விஷயத்தை எனக்கு எல்லாவற்றையும் எளிதாக்கி விட்டது” என்று கூறியிருக்கிறார்.