நான் 156 கிமீ மயங்க் யாதவ் பவுலிங்ல வலையில் ஆடல.. காரணம் இதுதான் – சூரியகுமார் யாதவ் பேட்டி

0
1308
Mayank

நாளை பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அதிவேக இந்திய இளம் வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் அறிமுகம் ஆவாரா? என்பது குறித்து இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் பதில் அளித்திருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் 156 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசி எல்லோரையும் ஆச்சரியப்படுத்திய பந்துவீச்சாளராக மயங்க் யாதவ் இருந்தார். எனவே அவர் நாளை இந்திய அணிக்காக முதல்முறையாக அறிமுகம் ஆவாரா? என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

- Advertisement -

மயங்க் யாதவின் சிறப்பு திறமை

மயங்க் யாதவின் சிறப்பு அவருடைய அதிவேகம் மட்டும் கிடையாது. அவ்வளவு வேகத்தில் பந்து வீசினாலும் கூட அவரிடம் கட்டுப்பாடு மிகச் சிறப்பாக இருக்கிறது. எந்த ஏரியாவில் பந்து வீச வேண்டுமோ தொடர்ந்து அந்த ஏரியாவில் அவர் துல்லியமாக பந்து வீசுகிறார்.

இப்படி வேகமும் துல்லியமும் ஒரே புள்ளியில் இணையும் பொழுதுதான் அவர் ஆபத்தான பந்துவீச்சாளராக மாறுகிறார். பவுன்ஸ் பந்துகளை எதிர்கொண்டு விளையாடுவதில் வல்லவர்களான ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் மற்றும் கிரீன் இருவரும் ஐபிஎல் தொடரில் மயங்க் யாதவ் வந்து வீச்சில் எந்த க்ளுவும் இல்லாமல் தடுமாறினார்கள். அந்த அளவுக்கு மிகச் சிறப்பாக இருக்கிறார்.

- Advertisement -

மயங்க் யாதவ் அறிமுகம் ஆவாரா?

நாளை போட்டியில் மயங்க் யாதவ் அறிமுகம் ஆவாரா? என்பது குறித்து பேசி இருக்கும் சூரியகுமார் யாதவ் கூறும்பொழுது “அவரிடம் எக்ஸ் பேக்டர் திறமை இருக்கிறது. ஐபிஎல் தொடரில் அதை நாம் பார்த்திருக்கிறோம். அவரிடம் இருப்பது போலவே திறமைகள் அணியில் உள்ள மற்றவர்களிடமும் இருக்கிறது. இந்த காயின்கள் அனைத்தும் ஒன்றாக வருவதைப் பார்க்க நன்றாக இருக்கும்”

“நான் வலையில் மயங்க் யாதவ் பந்து வீச்சை எதிர்கொண்டு விளையாடவில்லை. ஏனென்றால் பயிற்சிக்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆர்டர் இருந்தது. என்னுடைய ஆர்டரில் அவர் இல்லை. ஆனால் அவர் பந்து வீச்சையும், அவர் வைத்திருக்கும் திறனையும் நான் பார்த்திருக்கிறேன். அந்தக் கூடுதல் வேகத்துடன் அவரிடம் எக்ஸ் பேக்டர் இருக்கிறது”

இதையும் படிங்க : டி20 உலக கோப்பை பைனல்.. கடைசியில ரிஷப் பண்ட் செஞ்ச அந்த காரியம்தான் மாத்துச்சு – ரோகித் சர்மா பாராட்டு

“மாநில கிரிக்கெட்டில் ஒரு வருடம் முழுக்கவும், ஐபிஎல் மாதிரியான தொடர்களிலும் அணி நிர்வாகங்கள் அவரை மிகவும் அருமையாக நிர்வகிக்கின்றன. ஏனென்றால் இந்திய அணிக்கு ஒரு கூடுதல் சிறப்பான வீரராக இருக்கிறார்.மேலும் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -