ஐசிசி நடத்தும் உலகக் கோப்பை தொடர்களில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை ஒரே ஒருமுறை மட்டுமே வென்றிருக்கிறது. அதுவும் பாபர் அசாம் தலைமையில் கடந்த 2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் வென்றது. தற்போது இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி குறித்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பேசியிருக்கிறார்.
தற்போது ஒன்பதாவது டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் இந்த மாதம் ஒன்பதாம் தேதி நியூயார்க் மைதானத்தில் மோதிக்கொள்ள இருக்கின்றன. கடந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் விராட் கோலியின் அபாரமான பேட்டிங் காரணமாக இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பேசி இருக்கும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் “இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி அதிக விவாதத்தை உருவாக்குகிறது என்று எனக்கு தெரியும். போட்டி குறித்து நிறைய அதிர்வுகள் இருக்கிறது. இது வீரர்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் இருக்கிறது.
உலகில் நீங்கள் எங்கு சென்றாலும் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியை பற்றி பேசுவார்கள். மேலும் ஒவ்வொரு நாட்டவரும் தங்கள் அணியை ஆதரிப்பார்கள். ஒவ்வொரு ரசிகரும் இந்த போட்டிக்காக காத்திருக்கிறார்கள். மேலும் அவர்கள் இந்த ஒரு போட்டியில் முக்கிய கவனத்தை செலுத்துகிறார்கள்.
நான் வெளிப்படையாக சொல்கிறேன் இந்த போட்டிக்கு இருக்கும் எதிர்பார்ப்பு எனக்கு பதட்டத்தை உண்டாக்க செய்கிறது. மேலும் இதை நீங்கள் எப்படி கையாளுகிறீர்கள் என்பதை பொறுத்து உருவாகிறது. நீங்கள் அடிப்படை விஷயங்களில் எவ்வளவு கவனம் செலுத்துகிறீர்களோ ஒரு வீரராக உங்களுக்கு அவ்வளவு நல்லது.
இதையும் படிங்க : நியூயார்க் மைதானத்தில் பிரச்சனை இருக்கு.. வீரர்கள் காயம் அடைய போறாங்க – ராகுல் டிராவிட் கவலை
மேலும் நாங்கள் கடத்தமுறை 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிராக வென்று இருக்க வேண்டும் ஆனால் தவற விட்டு விட்டோம். இது ஒரு அதிகபட்ச அழுத்தம் இருக்கும் போட்டி. நீங்கள் இயல்பாக இருந்து அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்தி உங்கள் திறமையில் நம்பிக்கை வைத்தால் விஷயங்கள் உங்கள் பக்கம் நடக்கும்” என்று கூறியிருக்கிறார்.