இப்படி தார் ரோடு பிட்ச் இருந்தா என்ன செய்யறது?.. என்னமோ நெனச்சு ஏதோ நடக்குது – பாக் நசீம் ஷா வருத்தம்

0
204

பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் வங்காளதேச அணியின் அபாரமான ஆட்டத்தால் ரன்களில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணியை விட முன்னிலையில் இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தானில் தயார் செய்யப்படும் ஆடுகளம் குறித்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் நஷீம் ஷா தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் ஆறு விக்கெட் இழப்புக்கு 448 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று பிட்ச் ரிப்போர்ட் கூறியதால் பாகிஸ்தான் அணி அதற்கு ஏற்றவாறு நான்கு வேகப் பந்துவீச்சாளர்களோடு களமிறங்கியது.

ஆனால் நேரம் செல்லச் செல்ல ஆடுகளம் பேட்டிங்க்கு முற்றிலும் சாதகமாக மாறியது. இதனால் வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 565 ரன்கள் குவித்திருக்கிறது. இதில் அதிகபட்சமாக முஸ்பிகுர் ரஹீம் 191 ரன்கள் குவித்து சாதனை படைத்திருக்கிறார். அதற்குப் பிறகு இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கி விளையாடி வரும் பாகிஸ்தான் அணி 23 ரன்கள் குவித்த நிலையில் நான்காவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது.

- Advertisement -

இன்னும் ஒரு நாள் ஆட்டம் மட்டுமே மீதம் இருப்பதால் இந்த போட்டி டிரா ஆகவே அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில் ஆடுகளத்தை தங்களுக்கு சாதகமாக தயாரிக்க முடியவில்லை என்றாலும் சூழலுக்கு தகுந்தவாறு தயாரிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் நஷீம் ஷா சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “நாங்கள் இப்போது நிறைய தொடர்களை பெற்றிருப்பதால், அதற்கு தகுந்தவாறு ஆடுகளங்களையும் பெற்று இருக்கிறோம் என்று நினைக்கிறேன். ஆடுகளத் தயாரிப்பாளர்கள் களத்தை பந்துவீச்சாளர்களுக்கு உதவியாக மாற்ற முயற்சித்தார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் புதிய பந்தின் வெப்பத்தின் காரணமாக மட்டுமே ஆடுகளம் சிறிது உதவியது. ஆனால் நேரம் செல்லச் செல்ல பேட்டிங்க்கு உதவியது. நமக்குத் தகுந்தவாறு பிட்ச்களை அமைப்பதன் மூலமே நமக்கு சாதகமான சூழ்நிலைகளை பயன்படுத்த முடியும்.

இதையும் படிங்க:205 ரன்.. பாஸ்பாலுக்கு மனம் தளராத இலங்கை.. கிளாசை காட்டிய ரூட்.. இங்கிலாந்து அணி முதல் டெஸ்டில் வெற்றி

இல்லையென்றால் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கலாம். ஆனால் இவை ரசிகர்களை மகிழ்விக்கும் படி இருக்க வேண்டும். இங்கு ஆடுகளம் வேகபந்துவீச்சாளர்களுக்கு உதவும் என்பதே எண்ணமாக இருந்தது. ஆனால் நான் எதிர்பார்த்தபடி எதுவும் சாதகமாக அமையவில்லை. வெளிப்படையாக நீங்கள் நான்கு வேக பந்துவீச்சாளர்களோடு செல்லும் போது வேகப்பந்து வீச்சில் தாக்குதல் நடத்த வேண்டும் என்று நினைப்பீர்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -