ஏதாவது சொல்லணும்னு சொல்லாதீங்க.. பங்களாதேஷ் முதல் தடவ இதுல நம்மள விட சிறப்பா இருந்தாங்க – விளாசும் சல்மான் பட்

0
74

பாகிஸ்தானில் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் வங்கதேச அணி, முதல் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சல்மான் பட், பாகிஸ்தான் அணியின் இந்த மோசமான தோல்விக்கான காரணம் குறித்து தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் ஆறு விக்கெட் இழப்புக்கு 448 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. அதற்குப் பிறகு தனது முதல் இன்னிங்ஸ் தொடங்கிய வங்கதேச அணி 565 ரன்கள் குவித்தது. பின்னர் 117 ரன்கள் பின்தங்கி இருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கிய பாகிஸ்தான் அணி எதிர்பாராத விதமாக 146 ரன்கள் மட்டுமே குவிக்க பின்னர் வங்கதேச அணி விக்கெட் இழப்பின்றி முப்பது ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக ஆடுகளம் சரியில்லை என்று பாகிஸ்தான் அணியின் உதவி பயிற்சியாளர் கூறியிருந்தார். அது மட்டுமல்லாமல் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் தனது கருத்தை முன் வைத்திருந்தார். ஆனால் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சல்மான் பட் வங்கதேச அணியின் வேகப்பந்து பேச்சாளர்களின் சராசரி வேகத்தை விட பாகிஸ்தான் அணியின் வேகம் குறைவாக இருந்தது என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “நான் இப்போது எங்கு தொடங்க வேண்டும்? நான்கு வேகப்பந்து விச்சாளர்களோடு விளையாடியது, டிக்ளரேஷன், லைன் அண்ட் லெந்த் என எல்லாமே தவறாகி விட்டது. வங்கதேச அணி பந்துவீச்சாளர்களின் சராசரி வேகம் பாகிஸ்தானை விட அதிகமாக இருந்தது இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன். அவர்கள் எங்கள் அணியை விட மிகவும் பொருத்தமாக இருந்தார்கள். எங்களது சீனியர் பந்துவீச்சாளர்களை விட ஜூனியர் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். மேலும் ஆடுகளத்தின் தரம் குறித்து கூறினால் எனது கருத்துப்படி ஆடுகளத்தில் பிரச்சனை இல்லை.

பிட்ச் நன்றாகவே இருந்தது. எங்களது பந்து வீச்சு பயிற்சியாளர் நாங்கள் விரும்பியபடி ஆடுகளம் அமையவில்லை என்று கூறினார். அணியின் பந்துவீச்சாளர்களும் இதே கருத்தை கூறினார்கள். அது எப்படி அர்த்தம் ஆகும்?. குறிப்பாக பாகிஸ்தான் அணி இரண்டு செசன்களில் ஆட்டம் இழந்தது. குறிப்பாக பாகிஸ்தான் அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் வருவதற்கு முன்பாகவே எங்கள் அணியின் டாப் பேட்ஸ்மேன்கள் வேகப்பந்து வீச்சில் ஆட்டம் இழந்தனர்.

இதையும் படிங்க:8 ஃபோர்ஸ் 6 சிக்ஸ்.. தனியாளாக கலக்கிய சிஎஸ்கே சமீர் ரிஸ்வி.. புவி அணி தோல்வி.. உபி டி20 2024

எனவே இது தவறான நிர்வாகம் மற்றும் நிர்வாக திறமையின்மை போன்றவற்றின் பட்டியல் ஆகும்” என்று சல்மான் பட் கூறுகிறார். இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான அடுத்த போட்டி இதே மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில் பாகிஸ்தான் கட்டாயம் வெற்றி பெற சிக்கலில் உள்ளது.

- Advertisement -