“வேதனையை வார்த்தைகளால் சொல்ல முடியாது.. இது விருப்பமானது இல்லை..!” – சிராஜ் உருக்கமான அறிக்கை!

0
398
Siraj

நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தோற்றது உணர்வுபூர்வமாக இந்திய வீரர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்து வருகிறது.

ஏனென்றால் இந்திய அணியின் செயல்பாடு அவ்வளவு சிறப்பாக இருந்தது. இதன் காரணமாக ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் எவ்வளவு ஏமாற்றம் அடைந்து இருக்கிறார்களோ அதைவிட பல மடங்கு ஏமாற்றம் விளையாடிய வீரர்களுக்கு இருக்கிறது.

- Advertisement -

இந்த தோல்வியில் இருந்து மீண்டு வர முடியாத இந்திய வீரர்களில் சிலர் இன்றுதான் சமூக வலைதளங்களில் வந்திருக்கிறார்கள். கேஎல் ராகுல் இன்று தன்னுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைதள கணக்கில் மிகவும் காயப்பட்டு இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

மேலும் இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த பொழுது அதை தாங்க முடியாமல் மைதானத்திலேயே கண்ணீர் விட்ட முகமது சிராஜ் இன்று தான் சமூக வலைதளத்திற்கு வந்திருக்கிறார். மேலும் அவர் உருக்கமான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார்.

அந்த அறிக்கையில் அவர் கூறும் பொழுது “நாங்கள் விரும்பிய படி எங்கள் பிரச்சாரம் முடிவடையவில்லை. ஆனால் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது எனக்கு மிகவும் பெருமையானது. பெருமைக்குரிய தருணம். நான் செய்ய விரும்பியதெல்லாம் எனது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதுதான்.

- Advertisement -

மனம் உடைந்து விட்டது. வார்த்தைகளால் அடைந்துள்ள ஏமாற்றத்தையும் வேதனையையும் விளக்க முடியாது. இது ஒரு கடினமான இழப்பு. இந்த நேரம் கடவுளின் விருப்பமாக இருந்திருக்காது. ஒவ்வொரு நாளும் இனி கடினமாக உழைக்க வேண்டும்.

எங்களுக்கு தேவையான கவனிப்பை வழங்குவதற்காகவும், போட்டிக்கு தயாராக அதற்கு எங்களுக்கு உதவுவதற்கும், திரைக்குப் பின்னால் மிக கடினமாக உழைக்கும், எங்கள் அணி ஊழியர்களுக்கு மிகப்பெரிய மரியாதையை செலுத்துகிறேன். உங்கள் பணி இந்திய அணிக்கு மகத்தானது.

உங்கள் ஆதரவிற்கு எங்கள் ரசிகர்களான உங்களுக்கு மிகவும் நன்றி. மைதானத்தில் நீலக்கடலை பார்ப்பது ஈடு செய்ய முடியாத உணர்வு. நீங்கள் வழங்கிய ஆற்றல் ஆச்சரியமாக இருந்தது. எல்லா வகையிலும் எங்களை ஆதரித்தது ஜெய்ஹிந்த்!” என்று கூறியிருக்கிறார்!