“முட்டாள்கள் மட்டும்தான் சச்சினோடு விராட் கோலியை ஒப்பிடுவார்கள்” – சோயிப் அக்தர் காட்டம்!

0
2130
Akthar

சர்வதேச கிரிக்கெட் உலகில் கடந்த 30 வருடங்களாக, தற்போது ஓய்வு பெற்ற பிறகும் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் எப்பொழுதும் பலரின் தேர்வாக இருப்பவர் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர்!

இவரது சாதனைகளை எழுத வேண்டும் என்றால் தனியாக ஒரு சின்ன புத்தகம் போடவேண்டிய அளவுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் பல நிகழ்வுகளில் சாதனை படைத்திருக்கிறார்!

- Advertisement -

இவர் கிரிக்கெட் உலகத்திற்கு வந்த பிறகு சிறப்பாக விளையாடக்கூடிய வீரர்களை இவரோடு ஒப்பிடுவது ரசிகர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களின்பழக்கமாகவே இருந்து வருகிறது.

அதிக சர்வதேச ரன்களை அடித்தவர்கள் பட்டியலிலும் அதிக சதங்கள் அடித்தவர் பட்டியலிலும் சச்சினுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் விராட் கோலி இருந்து வருகிறார்.

இந்த வகையில் இதனால் சச்சின் உடன் விராட் கோலியை ஒப்பிடுவது கடந்த தசாப்தத்தில் விமர்சனத்தின் பழக்கமாகவே இருந்து வந்திருக்கிறது. மேலும் விராட் கோலியும் சச்சின் சர்வதேச கிரிக்கெட்டில் அடித்த நூறு சதங்களை எட்டக்கூடிய வாய்ப்பில் இருப்பவராகவும் இருக்கிறார்.

- Advertisement -

தற்போது இந்த சச்சின் விராட் கோலி ஒப்பீடு குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் தனது கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது
“சச்சின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன். முட்டாள்களால் மட்டுமே விராட் கோலியை சச்சின் உடன் ஒப்பிட முடியும். அவருக்கு முன்னும் பின்னும் அவரைப் போல் தாக்கத்தை உண்டாக்கிய பேட்ஸ்மேன் வேறு யாரும் கிடையாது.

சச்சின்தான் எப்பொழுதும் உச்சம். ஆனால் தற்போதைய கிரிக்கெட்டில் இருக்கின்ற பேட்ஸ்மேன்களில் விராட் கோலி மிகச் சிறந்த பேட்ஸ்மேன் ஆக இருக்கிறார்!” என்று மிகக் கடுமையாகக் கூறியிருக்கிறார்!