“கோலிகிடையாது.. சச்சின் செய்த வேலையை இந்திய அணியில் ஒருத்தர் செய்றார்!” – ஜோ ரூட் பரபரப்பான பேச்சு!

0
1900
Virat

தற்பொழுது உலகக் கிரிக்கெட்டில் நான்கு முக்கிய வீரர்களை குறிப்பிடும் பொழுது, அதில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் வருகிறார்!

மேலும் தற்போது டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்களில், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன் மற்றும் சதங்கள் எடுத்துள்ள சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படும் வீரர்களில், ஜோ ரூட் மிகவும் முக்கியமானவராக இருக்கிறார்.

- Advertisement -

இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோட்டைக்கு இவரது பெயர் முதலில் டிக் செய்யப்பட்டு இருக்கிறது. அதிரடியான இங்கிலாந்து பேட்டிங் யூனிட்டை கட்டுப்படுத்தக்கூடிய டிரைவராக இவர் இருக்கிறார்.

இந்தப் பொறுப்பை கையில் எடுத்து, தேவைப்படும் நேரத்தில் இவரே மிகப்பெரிய அதிரடி வீரராக மாறி விளையாடவும் செய்கிறார். அதே நேரத்தில் விக்கெட் இழப்பு ஏற்பட்டால், நின்று ஆட்டத்தை எடுத்துச் சென்று வசதியாக்கி கொடுக்கிறார்.

மேலும் சுழற் பந்துவீச்சையும், இந்திய நிலையில் சிறப்பாக விளையாடும், மிகக் குறைந்த வெளிநாட்டு வீரர்களில் ஜோ ரூட் மிக மிக முக்கியமானவர். எனவே அவர் இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் முக்கிய வீரராக இருப்பார். இதற்காகவே இந்த முறை இவர் ஐபிஎல் தொடருக்கு வந்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தற்பொழுது இந்திய அணியில் சூரியகுமார் யாதவ் பற்றி பேசி உள்ள இவர் ” சூரியகுமார் தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் சீராக இருப்பது பயமுறுத்துகிறது. குறுகிய நேரத்தில் அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இவ்வளவு சதங்கள் எப்படி அடித்தார்?. நான்காம் இடத்தில் பேட்டிங் செய்து டி20 கிரிக்கெட்டில் இதை செய்வது பெரிய விஷயம். அதை இவ்வளவு விரைவாக செய்து இருக்கிறார். இது உண்மையில் குறிப்பிடத்தக்கது.

மேலும் அவருக்கு பந்து வீசுவது என்பது கடினமான வேலைகளில் ஒன்று. ஏனென்றால் அவர் பந்தை அடிக்க முடியாத இடங்களில் எல்லாம் அடிப்பார். அவரைப் பார்க்கும் எந்த குழந்தையும் அதை அப்படியே சென்று செய்ய விரும்பும். அவர் செய்வதும் விளையாடுவதும் வேடிக்கையாக இருக்கிறது.

விராட் கோலியை பொருத்தவரை அவருக்கு சச்சின் மிகுந்த உத்வேகமாக இருந்தார். நீங்கள் குழந்தைகளை பேட்டையும் பந்தையும் எடுக்க தூண்டுகோலாக இருப்பது மிகப்பெரிய விஷயம். இதற்காக விளையாட்டுக்குள் சென்று பெரிய விஷயங்களை செய்ய விரும்புகிறிர்கள். சூரியகுமார் யாதவ் அப்படியான வேலைகளைத்தான் செய்கிறார். அவரைப் பார்க்கும் குழந்தைகள் அவரைப் போலவே விளையாட ஆசைப்படும்!” என்று கூறியிருக்கிறார்!