140 வருடம்.. புதிய கிரிக்கெட் வரலாறை எழுதும் இந்தியா இங்கிலாந்து.. லார்ட் மைதானத்தில் அபூர்வ நிகழ்வு

0
151
BCCI

உலக கிரிக்கெட்டில் இங்கிலாந்தில் அமைந்திருக்கும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தை கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைப்பார்கள். இந்த மைதானத்தில் முதல்முறையாக இந்தியா மற்றும் இங்கிலாந்து ஒரு புதிய வரலாற்றை எழுத இருக்கிறது.

இங்கிலாந்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் முதல்முறையாக 1884 ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டி நடத்தப்பட்டது. இதற்கு அடுத்து கடைசி டெஸ்ட் போட்டி இந்த ஆண்டு சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடத்தப்பட்டது.

- Advertisement -

இங்கிலாந்து லண்டன் லார்ட்ஸ் பெருமை

இந்த மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி ஒரு பேட்ஸ்மேன் சதம் அடிப்பதும், ஒரு பந்துவீச்சாளர் ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றுவதும் உலகெங்கும் உருவாகும் கிரிக்கெட் வீரர்களின் மிகப்பெரிய கனவாகவும், சாதித்தவர்கள் கௌரவமாகவும் உணரும் ஒரு விஷயமாக இருக்கிறது.

மேலும் இங்கிலாந்து கிரிக்கெட்டை கண்டுபிடித்த நாடாக இருக்கிறது. இப்படி இருந்த பொழுதும் பல ஆண்டுகளாக இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி வந்த பொழுதிலும் கூட, புகழ்மிக்க தங்களது சொந்த லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து பெண்கள் அணி விளையாடியது கிடையாது. மேலும் வேற எந்த பெண்கள் அணியும் அங்கு விளையாடியது கிடையாது.

- Advertisement -

லார்ட்ஸ் மைதானத்தில் எழுதப்படும் புது வரலாறு

இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதிக் கொள்ளும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்க இருக்கிறது. இது கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பதியப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் முதல்முறையாக நடக்க இருக்கும் இந்த நிகழ்வு இரு அணிகளுக்கும் கௌரவம் மிக்க ஒன்றாக அமைகிறது.

இதையும் படிங்க :

இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ரிச்சர்ட் கோல்ட் கூறும்பொழுது “2026 ஆம் ஆண்டு இங்கிலாந்து பெண்கள் அணிக்கு எதிராக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடுவதற்கு இந்திய பெண்கள் அணி வருவார்கள் என்று கூறுவதில் நான் பெரிய மகிழ்ச்சி அடைகிறேன். இது உண்மையில் ஒரு சிறப்பு சந்தர்ப்பமாகவும் மற்றும் உண்மையான முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகவும் இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -