தோனி இந்த வருஷம் ஒரு சேஞ்ச் பண்ணி இருக்கார்.. ஹர்திக் அதை ஃபாலோ பண்ணாலே போதும் – நவ்ஜோத் சிங் சித்து பேட்டி

0
153
Hardik

ஐபிஎல் 17வது சீசனுக்கு கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற மினி ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களுக்கு தேவையான வீரர்களை மிகச் சிறப்பான முறையில் வாங்கி இருந்தது. மேலும் டிரேடிங் முறையில் ஹர்திக் பாண்டியாவை அணிக்குள் கொண்டு வந்திருந்தது. இதன் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரை வெல்வதற்கான அதிகபட்ச வாய்ப்பிருக்கும் அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி கணிக்கப்பட்டது.

ஆனால் எதிர்பார்ப்புகளுக்கு அப்படியே நேர்மாறாக மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்து, தற்போது புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கான எதிர்ப்பு வெளியில் இருந்து மட்டும் இல்லாமல், சொந்த அணியின் ரசிகர்களாலும் அவர் மிகவும் எதிர்க்கப்படுவது பெரிய சிக்கலை உண்டாக்கி இருக்கிறது.

- Advertisement -

மினி ஏலத்தில் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களை வாங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காக ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டு இருந்த ஆகாஷ் மதுவாலை சேர்க்கவில்லை. மேலும் கடந்த வருடம் பேட்டிங்கில் நிரூபித்து இருந்த நெகேல் வதேராவுக்கும் வாய்ப்பு தரவில்லை. ஆரம்பகட்ட பந்துவீச்சுக்கு பும்ராவையும் கொண்டு வரவில்லை.

இதெல்லாம் சேர்ந்து, இத்தோடு ரசிகர்களின் எதிர்ப்பும் இருந்ததால் மும்பை இந்தியன்ஸ் அணி மிகப்பெரிய எதிர்மறையான சூழலில் சிக்கி இருக்கிறது. இந்த அணி மீண்டு வருவதற்கு என்ன செய்ய வேண்டும்? என தோனியை உதாரணமாக வைத்து இந்திய முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து யோசனை கூறியிருக்கிறார்.

இதுகுறித்து சித்து கூறும் பொழுது “வெற்றிக்கு நிகராக எதுவுமே கிடையாது. மும்பை இந்தியன்ஸ் அணி தன்னுடைய போட்டிகளில் வெற்றி பெற்று இருந்தால், தற்பொழுது ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராகவும் அந்த அணி நிர்வாகத்திற்கு எதிராகவும் இருக்கும் எதிர்ப்பு என்பது இருந்திருக்காது. தற்பொழுது ஹர்திக் பாண்டியா டீம் செலக்ஷனில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் 277 ரன்கள் விட்டுத் தந்ததால் எல்லோரும் அலறுகிறார்கள். எனவேஇதில் கவனம் தேவை.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய கிரிக்கெட்டுக்கு இன்னொரு சூரியகுமார் கிடைச்சிட்டார்.. இனிமே அறுவடை பண்ணலாம் – ஷேன் பாண்ட் பேச்சு

இந்த விஷயத்தில் தோனி என்ன செய்கிறார் என்பதை பாருங்கள். சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டம் வென்ற பொழுது அதிக ரன் அடித்த கான்வே அவர்களுக்கு இந்த முறை கிடைக்கவில்லை. ஆனால் தோனி அந்த இடத்திற்கு ரச்சின் ரவீந்தராவை மிகச் சரியாக கொண்டு வந்திருக்கிறார். இப்படி சரியான மாற்று வீரர்களை கண்டுபிடிக்க வேண்டும். அப்படி செய்தால் சுலபமாக வெற்றி பெறலாம். மேலும் இந்திய அணிக்கு கேப்டனாக இருக்கக்கூடியவர், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து வெற்றி பெற்று தந்தவர், தற்போது எப்படி கேப்டனாக இருக்க தகுதி இல்லாமல் போய்விட்டார் என்கின்ற ரசிகர்களின் கோபம் நியாயமானது” என்று கூறியிருக்கிறார்.