பாகிஸ்தான பாருங்க ஈஸியானத கஷ்டமாக்கற வித்தையை கத்துக்கோங்க.. கோழைக்குதான் சாதாரணம் – நவ்ஜோத் சிங் சித்து விமர்சனம்

0
7
Sidhu

நேற்று நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான அணி தனது கடைசிப் போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாடியது. 107 ரன் இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் மீண்டும் மோசமாக பேட்டிங் செய்து ஒரு வழியாக கடைசியில் வென்றது. மரியாதைக்குரிய அவர்களுக்கு இது இழிவானது என நவ்ஜோத் சிங் சித்து பாகிஸ்தான் வெற்றியை விமர்சனம் செய்திருக்கிறார்.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணியை பாகிஸ்தான் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர்கள் ஷாகின் அப்ரிடி மற்றும் முகமது அமீர் இருவரும் எடுத்ததும் பவர் பிளேவிலேயே அடக்கினார்கள். அந்த அணி 106 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 62 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட்டுகளை இழந்துவிட்டது. பாபர் அசாம் நின்று விளையாடி 34 பந்தில் 32 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணியை வெற்றி பெற வைத்தார். மீண்டும் ஒரு அதிர்ச்சி தோல்விக்கு தயாரான பாகிஸ்தான் அணி கடைசியாக ஒரு வழியாக வென்றது.

இதுகுறித்து பேசி இருக்கும் நவ்ஜோத் சிங் சித்து கூறும் பொழுது “பேட்டர்கள் யாரும் சரியாக செயல்படாத பொழுது கேப்டன் மட்டும் என்ன செய்ய முடியும். ஷாகின் மற்றும் அமீர் இருவரும் ஆட்டத்தை பாகிஸ்தான் பாக்கெட்டில் போட்டார்கள். அவர்கள் பந்து ஆடுகளத்தில் நன்றாக நின்றும் மேலும் திரும்பியும் வந்தது.

- Advertisement -

மேலும் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்யும்பொழுது ஆடுகளம் நன்றாக வறண்டு பேட்டிங் செய்ய சாதகமாக மாறியது. இதன் காரணமாக பாகிஸ்தான் எளிதாக வெற்றி பெறும் என்று நினைத்தேன். ஆனால் ஒரு எளிதான விஷயத்தை எப்படி கடினமாக ஆனதாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் அணியிடமிருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க : ஐபிஎல்ல கேஎல் ராகுலுக்கு நடந்தது பரவாயில்ல.. எனக்கெல்லாம் தினமும் நடக்கும் – ரிஷப் பண்ட் வெளியிட்ட தகவல்

கடைசியாக 62 ரன்கள் அவர்கள் எடுத்த பொழுது ஆறு விக்கெட்டுகளை இழந்தார்கள். அப்பொழுது இதயம் வாய்க்கு வந்து விட்டது. தங்களுடைய பெருமைக்காக கோழைகள்தான் விளையாட மாட்டார்கள். மரியாதைக்குரிய அவர்களுக்கு இது ஒரு இழிவான விஷயம். இருந்தாலும் நீண்ட நாட்களாக விஷம் அருந்தி கொண்டிருக்கும் ஒருவனுக்கு கிடைக்கும் இரண்டு சொட்டு அமிர்தம் போதுமானது. அதுபோலத்தான் பாகிஸ்தான் அணிக்கு இந்த வெற்றி மிகவும் முக்கியமான ஒன்று” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -