என் 800 டெஸ்ட் விக்கெட்.. இனி யாராலும் தாண்ட முடியாது.. வருத்தமான காரணம் இதுதான் – முரளிதரன் பேட்டி

0
580

உலகின் தலைசிறந்த சுழற் பந்து வீச்சாளரான இலங்கையைச் சேர்ந்த முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி யாருமே அவ்வளவு எளிதில் வீழ்த்த முடியாத உலக சாதனையை படைத்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் தனது சாதனையை முறியடிப்பது என்பது தற்போதைய கிரிக்கெட்டில் சாதாரண விஷயம் அல்ல என்று அதற்கான காரணத்தையும் விரிவாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

வளர்ந்து வரும் நவீன கிரிக்கெட்டின் காரணமாக கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதை விட டி20 பிரான்சிஸ் லீக் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதில் மிகுந்த ஆர்வமாக இருக்கின்றனர். ஏனென்றால் வருடம் முழுவதும் விளையாடி சர்வதேச கிரிக்கெட்டில் ஈட்டும் வருமானத்தை விட பிரான்சிஸ் டி20 தொடர்களில் குறைந்த காலங்களில் விளையாடி அதிக வருமானத்தை ஈட்டி விடுகின்றனர்.

இதனால் இளம் வீரர்கள் கூட தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு அதிக ஆர்வம் காட்டுவதில்லை. விரைவிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பிரான்சிஸ் லீக் விளையாடத் தொடங்கி விடுகின்றனர். இதனால் தற்போதைய நவீனமான கிரிக்கெட்டில் தனது சாதனையை வீழ்த்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்று 133 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 800 விக்கட்டுகள் வீழ்த்திய முத்தையா முரளிதரன் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “டெஸ்ட் கிரிக்கெட் பற்றி நான் நிச்சயமாக கவலைப்படுகிறேன். ஒவ்வொரு நாடும் வருடத்திற்கு ஆறு முதல் ஏழு டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடுகிறது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடலாம். ஆனால் மற்ற நாடுகளில் இருக்கும் மக்கள் அதை அதிகம் விரும்பி பார்ப்பதில்லை. இதனால் டெஸ்ட் போட்டிகள் மிகவும் குறைவாகவே விளையாடப்படுகின்றன.

எனது 800 விக்கட்டுகள் சாதனையை தாண்டுவது என்பது மிகவும் கடினமானது. ஏனென்றால் குறுகிய வடிவ கிரிக்கெட்டுக்கு தற்போது அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மேலும் நாங்கள் 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடினோம். ஆனால் தற்போது தொழில் குறுகிய வடிவில் உள்ளது. இலங்கை இங்கிலாந்து டெஸ்ட் தொடர் குறித்து கூறினால் இலங்கை அணியிடம் நிலைத்தன்மை என்பது தான் பிரச்சனை.

இதையும் படிங்க:பங்களாதேஷ் கிட்ட அந்த 2 விஷயத்தை புறக்கணிக்க முடியாது.. ஆனா உறுதியா சொல்றன் இது நடக்கும் – சுப்மன் கில் பேட்டி

அவர்கள் எவ்வளவு நல்லவர்கள் என்பதெல்லாம் முக்கியமில்லை. அவர்கள் அனைவரும் திறமையான வீரர்கள். ஒரே ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அவர்களை எப்படி அனுபவமிக்கவர்களாக மாற்றுவது என்பதுதான். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் அது மிகவும் கடினம். பல விளையாட்டுத் தொடர்கள் அவர்களின் தலையில் இருக்கிறது” என்று கூறி இருக்கிறார். தற்போதைய கிரிக்கெட் வீரர்களில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த நாதன் லியோன் 530 விக்கெட்டுகளும், இந்தியாவின் அஸ்வின் 516 விக்கெட்டுகளும் வீழ்த்தி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -