பாகிஸ்தான் அணிக்கு எதிராக பங்களாதேஷ் அணி பாகிஸ்தானின் ராவல்பிண்டி மைதானத்தில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் விளையாடிக் கொண்டு வருகிறது.
இந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் சரிவில் இருந்து பிறகு சிறப்பாக விளையாடி மீண்டு வந்து பங்களாதேஷ் அணிக்கு பதிலடி கொடுத்தது. அதே பாணியில் தற்பொழுது பங்களாதேஷ் அணி பாகிஸ்தான் அணியின் சொந்த மண்ணில் பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறது.
இரண்டு முக்கிய சதங்கள்
பாகிஸ்தான் அணி டாஸ் போட்டு முதலில் பேட்டிங் செய்து 16 ரன்களில் மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. இந்த நிலையில் துணை கேப்டன் சவுத் ஷகில் 141 மற்றும் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 171 ரன் ஆட்டமிழக்காமல் எடுக்க, பாகிஸ்தான் அணி மீண்டு வந்து ஆறு விக்கெட் இழப்புக்கு 448 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது.
இந்த நிலையில் பங்களாதேஷ் அணி 143 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது. இதைத்தொடர்ந்து பங்களாதேஷ் அணி மேற்கொண்டு 305 ரன்கள் பின் தங்கியிருந்த பொழுது முஷ்பிக்யூர் ரஹீம் விளையாடுவதற்கு உள்ளே களம் புகுந்தார்.
சாதனை பதிலடி சதம்
இந்த நிலையில் அவர் சத்மன் இஸ்லாம் உடன் இணைந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இதைத்தொடர்ந்து லிட்டன் தாஸ் உடன் இணைந்து மிகச் சிறப்பான 114 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கொண்டு வந்தார். இந்த நேரத்தில் அணியை காப்பாற்றி 200 பந்துகளில் தன்னுடைய 11வது டெஸ்ட் சதத்தை அடித்தார். மேலும் அவருக்கு சர்வதேச அளவில் இருபதாவது சதமாகவும் இது அமைந்தது.
இதையும் படிங்க : வெறும் 5 வருஷம்.. 100 சதங்கள்.. நாங்க மூணு பேர் சேர்ந்து செஞ்சது ஒரு பொற்காலம் – ஷிகர் தவான் பேட்டி
மேலும் முஸ்பிகியூர் ரஹீமுக்கு இது வெளிநாட்டு மண்ணில் ஐந்தாவது டெஸ்ட் சதம் ஆகும். இதற்கு முன்பாக தமிம் இக்பால் வெளிநாட்டு மண்ணில் அதிகப்படியாக நான்கு டெஸ்ட் சதங்கள் அடித்திருந்தார். அந்தச் சாதனையை தற்பொழுது இவர் முறியடித்திருக்கிறார். மேலும் தமிம் இக்பாலுக்குப் பிறகு ஒட்டுமொத்தமாக பங்களாதேஷ் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர் ஆக 15 ஆயிரம் ரன்கள் கடந்து இருக்கிறார். மேலும் பங்களாதேஷ் அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர் ஆகவும், முதலில் 6 ஆயிரம் ரன்கள் எடுத்தவர் என்கின்ற சாதனையை நோக்கியும் நகர்ந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது