தமிழக கிரிக்கெட் அசோசியேஷன் நடத்தும் புச்சி பாபு தொடரில் தமிழக அணியிடம் மும்பை அணி 286 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஸ்ரேயாஸ் ஐயர் மிகுந்த ஏமாற்றத்தை அளித்தார். மேலும் அவருடைய பேட்டிங் பலவீனத்தை மாற்றியும் அமைக்கவில்லை.
இந்த தொடரில் தமிழக அணியை எதிர்த்து விளையாடிய மும்பை அணி கடைசி இன்னிங்ஸில் 510 ரன்கள் டார்கெட்டை நோக்கி விளையாடி இறுதியாக 286 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. காயத்தின் காரணமாக இரண்டாவது இன்னிங்ஸில் சூரியகுமார் யாதவ் விளையாடவில்லை. மேலும் கேப்டன் சர்பராஸ் கானும் ஏமாற்றம் தந்தார்.
தீராத பிரச்சனை
ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஷார்ட் பந்தில் பெரிய பலவீனம் இருந்து வருகிறது. இதை எதிரணிகள் கண்டுபிடித்ததில் இருந்து அவர் விளையாடுவதற்கு வந்தாலே உடனே வேகப்பந்துவீச்சாளர்களைக் கொண்டு வந்து ஷார்ட் பந்தை வீசுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இந்த பிரச்சனைக்கு ஸ்ரேயாஸ் ஐயர் இதுவரையில் தீர்வு கண்டுபிடிக்காதது வருத்தமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது.
மும்பை வான்கடே மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானது. மும்பை வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் அப்படியான ஒரு மைதானத்தில் விளையாடி வளர்ந்து ஷார்ட் பந்தில் பலவீனம் கொண்டவராக இருப்பது ஆச்சரியமான ஒன்று. தனக்கு அந்த பந்தில் எந்தவிதமான பலவீனமும் இல்லை என அவர் சொல்லிக் கொண்டாலும், அவர் மிக மலிவான முறையில் ஷார்ட் பந்தில் ஆட்டம் இழக்கிறார்.
கம்பீர் என்ன செய்யப் போகிறார்?
தமிழக அணிக்கு எதிரான புச்சி பாபு தொடரின் முதல் இன்னிங்சில் ஸ்ரேயாஸ் ஐயர் சாய் கிஷோர் பந்துவீச்சில் 2 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதற்கடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் 79 பந்துகளை சந்தித்து 22 ரன்கள் எடுத்து, தமிழக வேகப்பந்துவீச்சாளர் அச்யுத் வீசிய ஷார்ட் பந்தில் மிக எளிதாக விக்கெட்டை கொடுத்து வெளியேறினார். அவருடைய இந்த பலவீனம் அப்பட்டமாக வெளிப்பட்டது.
இதையும் படிங்க : ஸ்பின் சாதகமா பிட்ச் போடாதிங்க.. என்ன நடந்திருக்கு தெரியுமா?- அஸ்வினை மறைமுகமாக விமர்சிக்கும் ஹர்பஜன்
கௌதம் கம்பீர் ஸ்ரேயாஸ் ஐயர் மீது மீண்டும் நம்பிக்கை வைத்து இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு கொண்டு வந்தார். ஆனால் அவர் அதிலும் பெரிய அளவில் விளையாடவில்லை. இதைவிட பெரிய பிரச்சினையாக அவருடைய ஷார்ட் பந்து பலவீனம் தொடர்ந்து இருந்து வருகிறது. அடுத்தடுத்து 10 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தொடர்ந்து விளையாட இருக்கும் நிலையில், கம்பீர் மற்றும் அகர்கர் இருவரும் இவர் விஷயத்தில் என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்பது பெரிய எதிர்பார்ப்பாக தற்போது மாறிவிட்டது!
He is shreyas iyer in buchi babu tournament
— Harsh shekhawat (@wordofshekhawat) August 30, 2024
When journalists asked him about his short bowling issue , he got angered and gave cryptic reply to journalist
But it’s been 4 years and still he is not able to play short bowling even on indian pitches #shreyasiyer pic.twitter.com/3vaW2qR0K1