பல கஷ்டப்பட்ட சர்பராஸ் கான் அந்த மாதிரி இருக்கிறது.. இந்தியாவுக்குதான் பெரிய அதிர்ஷ்டம் – முகமது கைஃப் பேட்டி

0
115
Kaif

இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் சர்பராஸ் கான் குறித்து மிகவும் பாராட்டி பேசி இருக்கிறார். மேலும் அவர் சிறுவயதில் இருந்து எவ்வளவு கடினப்பட்டு முன்னேறி வந்திருக்கிறார் என்பது குறித்தும் கூறியிருக்கிறார்.

தற்போது பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம் பெற்ற சர்பராஸ் கானுக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் இரண்டு போட்டிகளிலுமே பெஞ்சில் அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இரானி கோப்பையில் எதிர்பாரா சாதனை

இந்த நிலையில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில் இரானி கோப்பையில் விளையாடுவதற்காக சர்பராஸ் கான் விடுவிக்கப்பட்டார். அவர் நேராக சென்று மும்பை அணியில் இணைந்து அடுத்த நாளே களம் இறங்கினார்.

மும்பை அணிக்காக விளையாடிய சர்பராஸ் கான் கடினமான நேரத்தில் பேட்டிங் வந்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 222 ரன்கள் குவித்து அசத்தினார். மேலும் இரானி கோப்பை வரலாற்றில் சதம் அடித்த முதல் மும்பை வீரர் என்கின்ற அரிய சாதனையையும் படைத்தார். மேலும் இரானி கோப்பையில் சதம் அடித்திருக்கும் ரவி சாஸ்திரி, வாசிம் ஜாபர் மற்றும் ஜெய்ஸ்வால் போன்றவர்கள் பட்டியலிலும் இணைந்தார்.

- Advertisement -

மிகவும் கஷ்டமான பின்னணி

சர்பராஸ் கான் தன்னுடைய தந்தையின் பயிற்சியின் கீழ் உருவானவர். பெரிய அளவில் பொருளாதார பின்னணி இல்லாத காரணத்தினால் மிகவும் கடினமாக பயணப்பட்டு, மும்பை அணிக்காக தன் கணக்கில் ரன்கள் குவித்து காத்திருந்து இந்திய அணிகள் வாய்ப்பு பெற்றார். கிடைத்த வாய்ப்பில் மூன்று அரை சதங்கள் அடித்து தன்னை நிரூபித்து இருந்தார்.

இதையும் படிங்க : ஆஸி டெஸ்ட் சீரிஸ் முன்ன மாதிரி கிடையாது.. நாங்க அங்க ஜெயிச்சதும் இப்படி மாறிடுச்சு – விராட் கோலி பேட்டி

சர்பராஸ் கான் குறித்து பேசி இருக்கும் முகமது கைஃப் கூறும் பொழுது “சர்பராஸ் கான் வாழ்க்கையில் நிறைய கடினமான விஷயங்களை கடந்து வந்திருக்கிறார். கடினமான குழந்தைப் பருவம், உடல் தகுதி மீதான விமர்சனம், உத்தரப்பிரதேச அணிக்காக விளையாடி தோல்வியுற்றது என நிறைய கஷ்டங்களை சந்தித்திருக்கிறார். ஆனால் அவர் ஒவ்வொரு முறையும் துள்ளி குதித்து அதிலிருந்து வெளியே வந்திருக்கிறார். இரானி கோப்பையில் இரட்டை சதம் அடித்த சர்பராஸ் கான் இந்திய அணியின் பெஞ்சில் இருப்பது அவர்களுடைய அதிர்ஷ்டம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -