ஐபிஎல் 2025

சிஎஸ்கேவைவிட மும்பையில்தான் அதிக கிரிக்கெட் விளையாடுறேன்.. இங்குதான் மகிழ்ச்சியா இருக்கு – மிச்சல் சான்ட்னர் பேட்டி

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையான ஐபிஎல் போட்டி இன்று நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தற்போது விளையாடி வரும் மிச்சல் சான்ட்னர் இரண்டு அணிகளும் வெற்றிகரமாக இருப்பதற்கான காரணம் குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

சென்னை மும்பை மோதல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் தோல்வி மற்றும் 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 10வது இடத்தில் இருக்கிறது. அதே சூழ்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி 4ல் தோல்வி மற்றும் 3ல் வெற்றி என புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் இருக்கிறது. எனவே இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடைபெற இருக்கும் நிலையில் இதில் வெற்றி பெறும் அணி அடுத்த சுற்றுக்கான பாதையை தேர்ந்தெடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த சூழ்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் மிச்சல் சான்ட்னர் இந்த ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியான வாய்ப்புகளை பெற்று விளையாடி வருகிறார். இதற்கு முன்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சில வருடங்களாக இருந்தும் ஒரு சில போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு கிடைத்த நிலையில் தற்போது மும்பை அணி இவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்த இரண்டு அணிகளும் வெற்றிகரமான இருப்பதற்கான காரணம் குறித்து இவர் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இங்குதான் மகிழ்ச்சியாக உள்ளேன்

இதுகுறித்து சான்ட்னர் விரிவாக கூறும்போது “மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டு அணிகளுக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன. ஐபிஎல் தொடரை பொருத்தவரை இரண்டு அணிகளுமே வெற்றிகரமான அணிகளாகும். அவர்கள் அனைவருக்குமே நியாயமான வாய்ப்பை வழங்குகிறார்கள். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இரண்டு அணிகளும் ஒரு சில நெருக்கமான போட்டிகளால் தவறான பக்கத்தில் இருக்கின்றன.

இதையும் படிங்க:யார்க்கர் நல்லா வீசுறதால.. நான் ஸ்டார்க் ஆகணும்னு விரும்பல.. என் லட்சியம் இப்போ இதுதான் – ஆவேஷ் கான் பேட்டி

ஒருவேளை அவர்கள் இன்னும் சிறந்த கிரிக்கெட் விளையாட வில்லை என்று கூறலாம். ஆனால் ஐபிஎல் தொடர் என்பது மிகவும் கடினமான போட்டித் தொடர் ஆகும். இந்த ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணிகளும் நெருக்கமாக இருக்கின்றன. மேலும் பல கடைசி ஓவர்களில் முடிவுகளை பார்த்திருக்கிறோம். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி உடன் இப்போது இருப்பது மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கிறது. ஏனென்றால் நான் முன்பை விட இங்கு அதிக நேரம் விளையாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறுகிறார். அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் கொடுத்த வாய்ப்புகளை விட மும்பை இந்தியன்ஸ் அதிகமான வாய்ப்புகள் குறிக்கிறது என்று மறைமுகமாக பேசியிருக்கிறார்.

- Advertisement -
Published by