கோலி குழப்பம் பண்றது.. வாயில விரல் வச்சி சைலன்ஸ் சொல்றது.. எல்லாமே சரிதான் – மைக்கேல் வாகன் பேச்சு

0
126
Virat

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து ஆர்சிபி அணி எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் தோற்று வெளியேறிவிட்டது. ஆனாலும் ஐபிஎல் தொடரின் முக்கியமான பேசுபொருளாக விராட் கோலியே இருந்து வருகிறார். சிஎஸ்கே அணிக்கு எதிராகக் களத்தில் காட்டிய அவர் ஆக்ரோஷம் குறித்து தற்பொழுது இங்கிலாந்து முன்னால் கேப்டன் மைக்கேல் வாகன் பேசியிருக்கிறார்.

குறிப்பிட்ட சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி ரசிகர்களை பார்த்து சைலன்ஸ் என்று வாயில் விரல் வைத்து கூறியது பெரிய சர்ச்சையாக மாறியிருக்கிறது. இது சம்பந்தமாக சிஎஸ்கே வீரர்கள் சமூக வலைதளங்களில் தங்களது எதிர்ப்பை கடுமையாக பதிவு செய்து வருகிறார்கள்.

- Advertisement -

இன்னொரு பக்கத்தில் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் தமிழக வீரர்கள் சிஎஸ்கே அணிக்கு ஆதரவாக தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக ஆர்சிபி அணிக்கு எதிராக சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பதி ராயுடு நேரடியாக சமூக வலைதளங்களில் மோதி வருகிறார்.

இந்த நிலையில் விராட் கோலி பற்றி பேசி இருக்கும் மைக்கேல் வாகன் கூறும் பொழுது ” இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போது, விராட் கோலி அதிலிருந்து விலகி, லண்டனில் சாதாரண ஒரு வாழ்க்கையை நடத்தினார் என்று நினைக்கிறேன். அந்த வாழ்க்கை அவருக்கு பிடித்திருக்கிறது. ஓய்வுக்குப் பிறகு அவர் அப்படியான ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ நினைப்பார்.

- Advertisement -

விராட் கோலி ஓய்வு பெறுவதைப் பற்றி நீங்கள் எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அவர் கடந்த ஐபிஎல் சீசனில் மிகச் சிறப்பாக விளையாடி 700 க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்திருக்கிறார். மேலும் இதன் அடிப்படையில் பார்த்தால் அவர் பல ஆண்டுகள் விளையாடுவதற்கு தகுதியோடு இருக்கிறார். ஆனால் இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகும் பொழுது நிலைமைகள் மாறும். அப்பொழுது அவர் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்புவார்.

இதையும் படிங்க : ஆர்சிபி ரசிகர்களே.. உங்கள் லீடர்ஸ் சுயநலமா இல்லாம இருந்தா கப் அடிச்சி இருக்கலாம் – அம்பதி ராயுடு விமர்சனம்

விராட் கோலி களத்தில் வெளிப்படுத்தும் ஆற்றலை நான் விரும்புகிறேன். அவர் தனது ஆக்ரோஷமான அணுகுமுறையால் களத்தில் கொஞ்சம் குழப்பத்தை உண்டாக்குவார். கேமராவை பார்த்து வாயில் விரல் வைத்து அமைதியாக இருங்கள் என்று சொல்லுவார். ஆனால் விளையாட்டுக்கு உங்களுக்கு இப்படியான கதாபாத்திரங்கள் தேவை. மேலும் விளையாட்டில் உங்களை சீட்டின் நுணிக்கிக் கொண்டு செல்ல இப்படியான சச்சரவுகள் அவசியப்படுகிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -