தற்போது இங்கிலாந்தின் மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் முதல் டெஸ்டில் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் இலங்கை அணி இங்கிலாந்து அணியை தோற்கடிக்க வாய்ப்புகள் உள்ளதாக மைக்கேல் வாகன் கூறியிருக்கிறார்.
இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 236 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து விளையாடி வரும் இங்கிலாந்து அணி இரண்டாவது நாள் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்து இருக்கிறது. அந்த அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஜேமி ஸ்மித் ஆட்டம் இழக்காமல் 72 ரன்கள் எடுத்திருக்கிறார்.
மீண்டு வரும் இலங்கை அணி
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அணி பெரிய வீழ்ச்சியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போராடி முதல் இன்னிங்ஸில் 236 ரன்கள் எடுத்தது. மேலும் இங்கிலாந்து அணியின் முக்கிய விக்கெட்டுகளை சீக்கிரத்தில் கைப்பற்றிய அந்த அணிக்கு நெருக்கடியையும் உண்டாக்கி இருக்கிறது.
இந்த நிலையில் இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா இரண்டு சிறந்த பந்துகளை வீசி இரண்டு விக்கெட் கைப்பற்றினார். ஆடுகளத்தில் பந்து நிறைய திரும்பியது. இதையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது இலங்கை அணி இந்த போட்டியில் ஏதாவது ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம் என்று தெரிகிறது.
200 ரன் டார்கெட்
இதுகுறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறும் பொழுது “எனக்கு இந்த மைதானத்தின் ஆடுகளும் மிகவும் பிடித்திருக்கிறது. இது இலங்கையை ஆர்வமாக வைத்திருக்கும் என்று நினைக்கிறேன.அவர்கள் மூன்றாவது நாளில் இங்கிலாந்தின் மீதி நான்கு விக்கெட்டுகளை வேகமாக கைப்பற்ற முடியுமா?அழுத்தத்தின் கீழ் இரண்டாவது இன்னிங்ஸில் நன்றாக பேட்டிங் செய்ய முடியுமா? என்பதைப் பற்றியதுதான் எல்லாமே.
இங்கு ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தில்
இலங்கை அணி 200 ரன்கள் டார்கெட்டை உருவாக்கி இங்கிலாந்துக்கு வைத்தால், அவர்கள் இந்த வாரத்தில் இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சியை கொடுக்க முடியும். ஜேமி ஸ்மித் வெளியேறி அதிரடியாக விளையாடினால் என்ன நடக்கும் என்று வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான போட்டியில் பார்த்தோம். அவரால் 30, 40 பந்துகளில் 60 ரன்கள் எடுக்க முடியும்.
இதையும் படிங்க : டபுள் செஞ்சுரி.. ஒரு மணி நேரத்துக்கு முன்னவே ரிஸ்வான் கிட்ட சொல்லியாச்சு.. நடந்தது இதுதான் – சவுத் ஷகில் விளக்கம்
ஆனால் ஜேமி ஸ்மித்தை முன்கூட்டியே இலங்கை அணியால் எடுக்க முடிந்தால், இந்த டெஸ்ட் போட்டி இங்கிலாந்துக்கு எதிரானதாக மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.அதே சமயத்தில் இந்த ஆடுகளத்தில் புதிய பந்தில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் அழுத்தத்தை உருவாக்க முடியும். குறிப்பாக மார்க் வுட் தன்னுடைய வேகத்தால் இலங்கை அணி பேட்ஸ்மேன்களுக்கு பிரச்சனையை உண்டாக்க முடியும்” என்று கூறி இருக்கிறார்.