பாகிஸ்தான் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வானை பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இரட்டை சதம் அடிக்க விட்டிருக்க வேண்டும் என தற்பொழுது பாகிஸ்தான் ரசிகர்கள் அந்த அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளரை விமர்சனம் செய்து வருகிறார்கள்.
தற்போது பாகிஸ்தான் ராவல்பிண்டி மைதானத்தில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் முதல் இன்னிங்சை கேப்டன் ஷான் மசூத் டிக்ளேர் செய்தது தற்பொழுது சர்ச்சை ஆக மாறி வருகிறது.
முகமது ரிஸ்வானின் சூப்பர் சதம்
பாகிஸ்தான் அணி பங்களாதேஷ் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து முக்கிய மூன்று விக்கெட்டுகளை 16 ரன்களில் விட்டுவிட்டது. இதற்கடுத்து இளம் வீரர் சையும் அயூப் அரைசதம் அடித்தார். இவருடன் இணைந்து விளையாடி அரை சதம் அடித்த துணை கேப்டன் சவுத் ஷாகில் இறுதியாக 261 பந்துகளில் 141 ரன்கள் குவித்தார்.
இந்த நிலையில் முகமது ரிஸ்வான் களத்திற்கு உள்ளே வந்ததிலிருந்து அதிரடியான பாசிட்டிவான ஆட்டத்தை விளையாடினார். இது எதிரில் இருந்த சவுத் ஷகிலுக்கும் ரன் அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொண்டது. தொடர்ந்து முன்னேறியா ரிஸ்வான் 150 ரன்கள் தாண்டி இறுதியாக டிக்ளர் செய்யும் பொழுது 171 ரன்களில் இருந்தார். மொத்தமாக அவர் 211 ரன்கள் எடுத்திருந்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்டில் அதிக ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக மாறியிருப்பார்.
துணை கேப்டன் விளக்கம்
இந்த நிலையில் கேப்டன் ஷான் மசூத் பாகிஸ்தான் அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 448 ரன்கள் எடுத்திருந்தபோது இன்னிங்ஸை டிக்ளர் செய்து கொண்டார். முகமது ரிஸ்வான் இரட்டை சதத்திற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இது கடும் கோபத்தை உண்டாக்கி விட்டது. அவர்கள் தற்போது சமூக வலைதளத்தில் இது குறித்து விமர்சனம் செய்து வருகிறார்கள்
இதையும் படிங்க : பும்ராவை விட பெட்டரா வருவேனு சொன்ன பையன்.. ஸ்கூல் பாய்தான் ஆனா இதுக்காக விட்ற மாட்டோம் – தென் ஆப்பிரிக்கா கோச் பேட்டி
இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்திருக்கும் பாகிஸ்தான் அணியின் துணை கேப்டன் சவுத் ஷகில் ” ரிஸ்வான் பாயின் இரட்டை சதத்தை பொறுத்தவரையில் டிக்ளேர் செய்யப்பட்டதில் எந்தவித அவசரமும் காட்டப்படவில்லை. ஏனென்றால் ரிஸ்வான் பாய் இடம் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே எந்த இடத்தில் ஆட்டத்தை டிக்ளர் செய்வோம் என்று கூறப்பட்டு விட்டது. எனவே இதுகுறித்து அவருக்கு முன்பே ஒரு ஐடியாவும் இருந்திருக்கும். எனவே இதில் ஏதும் தவறு கிடையாது” என்று கூறியிருக்கிறார்.