முதல் டி20.. கம்பீர் வைத்த மெகா டிவிஸ்ட்.. உருவாகும் இன்னொரு டி20 அணி.. 2 வீரர்கள் அறிமுகம்.. ரசிகர்கள் உற்சாகம்

0
623
Surya

இந்தியா பங்களாதேஷ் அணிகள் மோதிக் கொள்ளும் முதல் டி20 போட்டி குவாலியரில் இன்று துவங்குகிறது. இந்த போட்டியில் கம்பீர் சில முக்கியமான முடிவுகளை எடுத்து அணியை மாற்றி இருக்கிறார்.

இன்றைய போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த போட்டியில் இந்திய அணியில் ரவி பிஸ்னாய், ஹர்ஷித் ரானா, திலக் வர்மா மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகியோர் விளையாடவில்லை.

- Advertisement -

இந்திய அணியில் கம்பீர் கொண்டு வந்த புதிய மாற்றம்

இன்றைய போட்டியில் மிக முக்கியமாக சமீபமாக இந்திய அணிக்கு விளையாட வந்த ரவி பிஸ்னாய்க்கு இந்த போட்டியில் முதலில் விளையாடும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அதற்கு பதிலாக மூன்று வருடங்கள் கழித்து உள்ளே வந்த வருண் சக்கரவர்த்தியை உடனடியாக கம்பீர் விளையாட வைத்திருக்கிறார். இவர்கள் இருவரும் கொல்கத்தா அணியில் ஐபிஎல் தொடரில் இணைந்து பணி செய்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு அடுத்து மிக முக்கியமாக கொல்கத்தா அணியின் வீரராக இருந்த போதும் ஹர்ஷித் ராணாவை வெளியில் வைத்து, மணிக்கு 156 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடிய மயங்க் யாதவ் மற்றும் ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடும் நிதீஷ் குமார் ரெட்டி இருவரும் அறிமுகமாகிறார்கள். கம்பீர் தனக்கு கிடைத்த இடைவெளியில் இன்னொரு புதிய டி20 இந்திய அணி உருவாக்கும் வேலையில் ரகசியமாக இறங்கி விட்டார்.

- Advertisement -

நிறைய திறமைகள் இருக்கிறது

இந்த போட்டியில் டாஸ் வென்ற பிறகு சூரியகுமார் யாதவ் பேசும்பொழுது “நாங்கள் முதலில் பந்து வீச போகிறோம். ஆடுகளத்தில் கொஞ்சம் ஈரப்பதம் தெரிகிறது நாங்கள் இதை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறோம். இந்த ஆடுகளம் பெரிதாக மாறாது. இந்த அழகான கூட்டத்திற்கு முன்பு திறமையை வெளிப்படுத்த ஆவலாக இருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : டிவியை தோனி உடைத்த விவகாரம்.. சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஹர்பஜன் பதிலடி.. புதிய பதிவால் சர்ச்சை.. என்ன நடக்கிறது?

பங்களாதேஷ் கேப்டன் நஜ்முல் சாந்தோ கூறும் பொழுது “தற்போது எங்களிடம் இருப்பது ஒரு புதிய அணியாகும். நாங்கள் கடந்த இரண்டு மாதங்களாக மிகவும் கடுமையாக உழைத்திருக்கிறோம். டாஸ் வென்று இருந்தால் முதலில் பந்துவீசி இருப்பேன். எங்கள் அணியில் மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் இரண்டு சுழல் பந்துவீச்சாளர்கள் மேலும் 6 பேட்ஸ்மேன்கள் உடன் களமிறங்குகிறோம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -