இந்தியா ஆஸி டெஸ்ட்.. என்னோட ஆர்வம் இந்த பெஸ்ட் பிளேயர்ஸ் 2 பேர் மேலதான்.. என்ன செய்றாங்கன்னு பார்க்கணும் – மேக்ஸ்வெல் பேட்டி

0
528

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மிக முக்கியமான டெஸ்ட் தொடராக கருதப்படும் பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடர் வருகிற நவம்பர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது.

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான கிளேன் மேக்ஸ்வெல் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணியில் விளையாடும் இரண்டு முக்கிய வீரர்கள் குறித்து சுவாரசியமிக்க கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி முதல் இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியா அணி விளையாட இருக்கிறது. இதற்கு முன்னர் ஏற்கனவே இரண்டு முறை நடைபெற்ற தொடரில் இரண்டு தொடர்களிலும் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இந்த சூழ்நிலையில் நவீன கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களாக ஸ்மித், விராட் கோலி, வில்லியம்சன் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் சிறந்து விளங்குகின்றனர்.

இதில் இந்திய அணியின் விராட் கோலி மற்றும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் இந்த தொடரில் எவ்வளவு ரன்கள் குவிக்கப் போகிறார்கள் மற்றும் எந்த அணி வீரர் சிறப்பாக செயல்பட்டு பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை சொந்த நாட்டுக்கு எடுத்துச் சொல்லப் போகிறார்கள் என்பதை காண ஆவலாக இருப்பதாக ஆஸ்திரேலியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல் கூறி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “இரண்டு சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேன்களான விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் இந்தத் தொடரில் எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகிறார்கள், நேருக்கு நேர் மோதும் விதம், யார் எவ்வளவு ரன்கள் இந்த தொடரில் குவிக்க இருக்கிறார்கள் என்பதையெல்லாம் காண ஆவலாக இருக்கிறேன். இந்த இருவரில் யார் அதிக ரன்கள் எடுக்கப் போகிறார் என்பதை காண்பதற்கு உற்சாகமாக உள்ளது.

மேலும் இந்த தொடரில் இவர்கள் இருவரும் அதை செய்யவில்லை என்றாலும், இந்த தலைமுறையின் இரண்டு சிறந்த வீரர்கள் நேருக்கு நேர் மோதுவது பார்க்க ஆவலாக இருக்கிறேன்” என்று மேக்ஸ்வெல் கூறி இருக்கிறார். ஆஸ்திரேலியா அணிக்காக இதுவரை ஏழு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள மேக்ஸ்வெல் 104 அதிகபட்ச ரன்களோடு 339 ரன்கள் குவித்திருக்கிறார்.

இதையும் படிங்க:ரியான் பராக் நீங்க ஸ்ரேயாஸ் மாதிரி பண்ணாதிங்க.. வீணாயிடுவிங்க – பாகிஸ்தான் பசித் அலி அறிவுரை

மேலும் இவர்கள் இருவரும் விளையாடும் டெஸ்ட் போட்டியை காண்பதற்கு மேக்ஸ்வெல் கூறியதைப் போலவே ஆர்வமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனெனில் டெஸ்ட் தொடரில் சான்ட் பேப்பர் சர்ச்சையில் சிக்கிய ஸ்மித்தை ரசிகர்கள் கிண்டல் செய்ய, அதற்கு விராட் கோலி ரசிகர்களின் செய்கையை தடுத்து நிறுத்தி அவருக்கு ஆதரவனை வழங்குமாறு கேட்டுக் கொண்டார் இந்த காட்சி சமூக வலைதளத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -