இந்திய அணி இந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே ஏற்பட்டிருக்கும் வார்த்தை மோதல் குறித்து மேத்யூ ஹைடன் பேசியிருக்கிறார்.
இந்திய அணி கடந்த இரண்டு முறை ஆஸ்திரேலியாவிற்கு டெஸ்ட் சுற்றுப்பயணம் செய்த பொழுது இரண்டு முறையும் தொடரை வென்று வந்திருக்கிறது. இதன் காரணமாக இந்த முறை பாட் கம்மின்ஸ் தலைமையில் சொந்த நாட்டில் இந்திய அணியை தோற்கடிக்க ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் மும்முரமாக தயாராகி வருகிறது.
ரிக்கி பாண்டிங் – ரவி சாஸ்திரி கருத்துக்கள்
இந்த நிலையில் ரிக்கி பாண்டிங் இந்த தொடர் குறித்து கூறியிருந்தபொழுது மூன்றுக்கு ஒன்று என இந்த முறை ஆஸ்திரேலியா அணி வெல்லும் என்று தெரிவித்திருந்தார். மேலும் இரண்டு முறை தொடரை தோற்றது இந்த முறை வெல்ல வேண்டிய ஊக்கத்தை ஆஸ்திரேலிய அணிக்கு கொடுக்கக் கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதில் அளித்து பேசி இருந்த ரவி சாஸ்திரி கூறும் பொழுது கடந்த 10 ஆண்டுகளாக பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபி மீது ஆஸ்திரேலியா கை வைக்கவில்லை என்பதை மறக்கக்கூடாது எனவும், ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி ஹாட்ரிக் டெஸ்ட் தொடர் வெற்றியை பெரும் எனவும் சவால் விட்டிருந்தார்.
நேரடி மோதலுக்கான பேச்சு
இதுகுறித்து மேத்யூ ஹைடன் கூறும் பொழுது ” இன்று இன்ஸ்டாகிராமில் ரவி சாஸ்திரி பேசிய ஒரு வீடியோவை நான் பார்த்தேன். அதில் அவர் 10 ஆண்டுகளாக ஆஸ்திரேலியா அணி பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபி மீது கை வைக்கவில்லை எனக் கூறியிருந்தார். இது நேராக சண்டையிடும் வார்த்தையாக இருக்கிறது.
கடந்த இரண்டு முறையாக ஆஸ்திரேலியாவில் நாங்கள் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை வெல்லவில்லை. ஸ்டீவ் வாக் தலைமையில் சிறந்த பலம் பொருந்திய ஆஸ்திரேலியா அணியாக இருந்த பொழுது 2001 ஆம் ஆண்டு எங்களால் சென்று இந்தியாவில் சாதிக்க முடியவில்லை. நாங்கள் வெளியில் சென்று தொடர்களை வெல்லத்தான் எப்பொழுதும் விரும்பினோம்.
இதையும் படிங்க : டெஸ்ட் கேப்டனா கோலி அந்த தப்ப செஞ்சிட்டார்.. அதுதான் என் மனசுல எப்பவும் இருக்கு – இந்திய முன்னாள் கோச் பேட்டி
இதன் காரணமாகவே இந்த தொடர் மிகவும் சிறப்பு வாய்ந்து ஒன்றாக இருக்கும். மேலும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் தங்களது சொந்த நாட்டில் மட்டுமே வெல்லக்கூடிய அணிகளாக இருக்காது. அவர்கள் வெளியில் சென்று வெற்றி பெறவும் தகுதி உடையவர்களாக இருப்பார்கள். மேலும் இந்த இரண்டு அணிகளுமே இறுதிப் போட்டியில் வெளிநாட்டில் விளையாடும் பொழுது அது இன்னும் சிறப்பானதாக இருக்கும். இப்படியான காரணத்தினால் இந்த இரு அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக” மாறுகிறது என்று கூறியிருக்கிறார்.